அனிச்சம் பூ 32

2.1K 77 41
                                    

கண்களில் கனவைத் தேக்கி மணநாளை எதிர்பாரத்துக் கொண்டிருந்தாள் ரஷ்மி , நொடிகளை நிமிடமாக்கி , நிமிடங்களை மணிகளாக்கி , மணிகள் நாட்களாவதற்கு , பொறுமை போதாமால் தவித்தாள் ...

தனது அறையில் , தூக்கத்தைத் தூரம் வைத்துவிட்டு , அமைதியான இரவுக்கு இசை அமைக்கும் கடிகாரதகதின் டிக் டிக் ஒலியோடும் ,கனவுகள் நீந்தும் விழிகளோடும் , நினைவுகள் பேசும் கதையோடும் ,கையிலிருந்த அலைபேசியில் செந்தூவின் படங்களை ரசித்துக்கொண்டிருந்தாள், அவள் செந்தூரனைப் பார்த்த நாட்களின் நினைவுகளை மனதோடு காட்சிப்படுத்திக் கொண்டிருந்தாள் ,

அவள் வாழ்வில் செந்தூரன் வரும் வரை அவள் பார்த்த ஆண்களின் உலகம் வேறாக இருந்தது , அசடு வழியும் அழகர்களும் , சொன்னதை மட்டும் செய்யும் , கிளிப்பிள்ளைகளும் , முன் விட்டுப் பின் பேசும் அறிவுஜீவிகளும் , திறமைப் பெண்களுக்கு திமிரென்று பட்டம் சூட்டும் மாகாக...

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

அவள் வாழ்வில் செந்தூரன் வரும் வரை அவள் பார்த்த ஆண்களின் உலகம் வேறாக இருந்தது , அசடு வழியும் அழகர்களும் , சொன்னதை மட்டும் செய்யும் , கிளிப்பிள்ளைகளும் , முன் விட்டுப் பின் பேசும் அறிவுஜீவிகளும் , திறமைப் பெண்களுக்கு திமிரென்று பட்டம் சூட்டும் மாகாக்கவிகளும் ,
பெண்ணை நேர்நின்று எதிர்க்கமுடியாமல் உயிரென்ற ஒழுக்கத்தை புறம் பேசி அவர்களை வீழ்த்த நினைக்கும் மாவீரர்களுமாய் , ஏதாவது அதிசயமாக யாரவது நன்முறையில் நடந்துகொண்டால் அவர்களையும் நடிக்கிறார்களோ ? என்று சந்தேகிக்கவே தோன்றும் , என்றாலும் இத்தனை வகையானோருக்கும் தன்னால் நன்மை செய்யமுடியுமெனில் அதையும் செய்யத் தயங்காமல் , அவர்களது குறைகளை அறியாமை என தூரவீசிவிட்டு , அவர்களுக்கு தன்னாலான நன்மையைச் செய்யும் , தெளிந்த சிந்தனையும் கருணையும் கொண்ட இவளைப் போன்ற பெண்களைப் பார்த்த பிறகுதான் , அகழ்வாரைத்தாங்கும் நிலமாகி , ஓயாது சுற்றும் பூமியைப் பெண்ணென்று உருவகப்படுத்தினார்கள் போலும் ...

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )Where stories live. Discover now