வான் நிலவை தான்
மறைக்கலாம் என்றே
எண்ணிக் காற்றிலாடும்
தென்னங் கீற்றெனவே ,
ஜாதி மல்லியின் வாசம்
வாங்கிய அவள் கேசம்
தன் சிறு கற்றைகளால்
காற்றினில் அலைந்து
அவள் கன்னங்களை
மறைத்து விளையாட ,
அவள் முகம் மறைக்கும்
குழல் ஒதுக்கியவனின் ,
கரத்தைத் தன் கரங்களில்
பதுக்கினாள் அவளறியா
ஆழ்துயிலில் ,செந்தூரனின் கரம் அவள் கரங்களுக்குள் சிறைபட , அதையும் கன்னத்தின் அடியில் வைத்துக் கண்ணுறங்க ஆரம்பித்திருந்தாள் ,
அந்தச் சிறுபிள்ளைச் செயலில் ஏனோ சிறிதாய் சிரிப்பு துளிர்த்தது , செந்துவுக்கு ,
மெதுவாக அவள் கரங்களுக்குள் பதுக்கிய இவன் கரத்தை விடுவித்து விட்டுக் கிளம்பினான் ,அவள் பதுக்கியக் கரத்தை விடுவித்துவிட்டவனுக்கு ,
அவள் பதுக்கி வைத்திருக்கும்
காதலை விடுவிக்க முடியாது ,
என்று தெரியவில்லை ...வீட்டிலிருந்து கிளம்பியவன் அந்த ஹோட்டலின் தன் நண்பர்கள் இருந்த அறையை அடைந்தான் , அவன் போகும் போது , நிர்மலும் , தினேஷிம் அறையில் இல்லை , வினய் மட்டுமே இருக்க , அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி , வினயிடம் மன்னிப்புக் கேட்டான் ,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...