செந்து சொன்னதைக் கேட்ட ஆகாஷின் மனம் ஏனோ நிலையில்லாமல் தவித்தது , செந்தூவின் விஷயம் தன் மனைவி செந்தூரிக்குத் தெரிந்தால் , ஜீவிகாதான் இந்த வீட்டு மருமகளாக வரவேண்டும் என்ற அவளின் ஆசையும் கலைந்து கவலை தந்துவிடும் , இதில் வேறு இது விஷயமாக மாமாவிடம் நான் பேச வேண்டுமா ? மனம் ஒப்பாத ஒரு விஷயத்தை அதுவும் திருமணவிஷயத்தை எப்படி நான் எப்படி ஆரம்பிப்பது ? தூக்கம் மறந்து சிந்தனையில் சிக்கினான்.
*****************************
ஜெயம் இல்லத்தின்
ஞாயிற்றுக் கிழமை
அதிகாலை விடியலின்
அழகான நொடியினில்
ஜீவிகாவிற்கான
காலை பொழுதும்
கவலையுடனேயே
ஆரம்பித்தது , ஆம்
இன்று மாலை இங்கிருந்து
கிளம்பவேண்டும் ,ஜனலின் மீதே
கன்னம் சாய்த்தே
எண்ணங்கள்
கோர்த்தே
தோட்டத்தைப்
பார்த்தாள் ,இவள் வைத்த
தினையை
கொத்தித் தின்றே
சுற்றித் திரியும்
சிட்டுக்குருவி ,கிளைகளின் நடுவே
இலைகளின் இடையே
எட்டிப்பார்க்கும்
இரட்டைவால்குருவி ,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...