அவன் கண்களை அவளில் இருந்து விலக்கும் எண்ணம் இல்லாமலே அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் ,ஜீவி தான் பேசுவதற்கு எந்த பதிலும் இல்லாமல் தன்னையே பார்ப்பதைக் கண்டவள் , நாம் கூறுவதில் நம்பிக்கை இல்லையோ என்று நினைத்து மீண்டும் ப்ளீஸ் மாமா என்று ஆரம்பித்தாள் , செந்து கையை உயர்த்தி அவளை நிறுத்துமாறு கூறிவிட்டு , அந்த விஷயத்தை பற்றி இனிப் பேசவேண்டாமே , என்றவன் தொடர்ந்தான் ,
" ரஷ்மி மாதிரி ஒரு பொண்ணை அவளது இயலாமையைக் காரணம் காட்டி அவளின் சம்மதத்தோடு அவளுக்குத் துரோகம் செய்துவிட்ட தவிப்புதான் எனைக் கொல்லுது , ஜீவிமா .. நம்ம மேரேஜ் எதிர்பாரம நடந்த விஷயம் , உன்னுடைய மனநிலைமையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது , நாம் இரண்டு பேருக்கும் திருமணம் ஆனதால் எதுவும் மாறிவிடாது , நீ எப்பொழுதும் போல் நம் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் , உனக்கு எந்தப் பயமும் தயக்கமும் வேண்டாம் , நீ என்னை கணவனாகப் பார்க்கனும்னு நான் எப்பொழுதும் எதிர்பார்க்க மாட்டேன் , அதேபோல் நானும் உன்னிடம் மனைவி என்கிற உரிமை எடுத்துக்கொள்ள மாட்டேன் , நீ என்னை முழுமையா நம்பலாம் , இதற்கும் மேல் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டாம் " ,
அதைக்கேட்ட ஜீவியின மனம் வலிக்கவே செய்தது , வீட்டில் சூழ்நிலையின் தீவிரத்தால் வேறு வழி தெரியாமல் திருமணத்திற்குச் சம்மதித்திருந்தாலும் , ரஷ்மியை நினைத்துக்கொண்டிருக்கும் செந்தூரனிடம் நமக்கான காதல் இல்லை என்று தெரிந்நதே திருமணம் செய்திருந்தாலும் ,
செந்தூரனை க்கணவனாக்கிக் கொள்ளும் , எண்ணத்தில் திருமாங்கல்யம் ஏற்க்க வில்லை என்றிடினும் , கணவன் மனைவி உறவில் எந்த உரிமையும் இல்லை என்று அவன் கூறியது , ஏனோ ஜீவியின் இதையத்தை அதிரவே செய்தது ,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...