தோப்பிற்கு வந்தவன் மனம் நிலையில்லாமல் தவித்தது , தோப்பி்ன் ஓரங்களில் ஓங்கிவளர்ந்திருந்த தேக்கு மரங்களின் நிழலில் காலாற நடந்தவன் , அங்கிருந்த வேலையாளிடம் சாவியைக் கொடுத்து வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்லிவிட்டு , அங்கிருந்த கட்டிலில் படுத்து கண்களை மூடினான் ,
அமைதியான தோப்பில் பறவைகளின் ஒலியும் , எங்கிருந்தோ வந்த இளையராஜா இசையும் , சாளரம் நுழைந்து திரைச் சீலைகளை சாமரம் வீசவைக்கும் தென்றல் காற்றும் , மனதுக்கு இதம் அளித்தாலும் ,
அவன் மனதில் ஜீவியின் அழுகை தோய்ந்த முகம் வந்து வந்து போனது ...அவனுள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றது , ஜீவிகா ஜெயம் இல்லத்தில் முதன் முதலில் தயங்கித் தடம் பதித்தது ,
செந்திலும் கணேஷிம் ஏதோ கூறிவிட்டதற்க்காய் கண்கலங்கி தவித்து , இப்பொழுதே இங்கிருந்து கிளம்பிவிடுவேன் என்றது ..
தான் அவளை ஷாப்பிங் அழைத்துச்சென்றது , சென்னை சென்று வர நான்கு நாட்கள் ஆகுமென்று கூறி தான் விடைபெறும் போது அந்தப் பிரிவிற்காய் அவள் அதிர்ந்தது ,
சென்னையிலிருந்து அலைபேசியில் அழைத்தபொழுதுதெல்லாம் அவள் தன்னிடம் அச்சுவெல்லமாய் பேசியது ,
அனிலையும் குருவியையும் படம்பிடித்தது , அந்தாக்ஷரி விளையாடியது ,
அன்பின் அக்கறையில் , அனைவரின் ஆரோக்கியத்திற்க்காய் , மூலிகை டீயும் சிறு தானிய சமையலுமாய் உணவில் மாற்றம் தந்தது ,ஜெயம் இல்லத்தில் என்னாளும் வீசும் இன்பத் தென்றலை , இவள் வருகையால் ஆனந்தப் புயலாய் மாற்றியது ...
அனைவரையும் அன்பில் சாய்த்து, இன்பத்தில் தோய்த்து , ஒரு வாரம் இருந்து பின் பிரிவதற்க்காய் கவலையுடன் கண்ணில் நீர்த்திவலைககள் உதிர்த்தது ..
கோவிலில் அவள் சூரியகாந்தி மலர் பறித்தபொழுது அவளின் பூம்பாதஙகளில் தைத்த முள்ளை எடுத்துத் தான் கலங்கும்போது , தனைப்பார்த்து அவள் கலங்கியது ,
YOU ARE READING
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
General Fiction🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன ப...