பகுதி - 12கலையை பூனேவிற்கு கிளம்பு என்று கூறிவனும் அவனே.. ஆனால் அதில் இருந்து தன் பின்னால் குட்டிப் போட்ட பூனையாக சுற்றி.. சுற்றி வந்தவனை காண.. காண.. முகம் கொள்ளா பூரிப்பில்.. அதிகமாக கலை மிளிர்ந்தாள் எனலாம் . இரு தினங்களாக.. அவளது ஸ்பரிசத்தை உணர்ந்துக் கொண்டே இருந்தவனாய்.. உரசியவனாகவே இருந்தான் .
மெல்லிய இதழ் சிரிப்போடு. கணவனின் அருகாமையும் அவளுக்கும் அதிகத் தேவையாகி போக.. கலையும் விலகவில்லை.. வார்த்தைகளாலும்.. செய்கையாலும் வதைப்பட்டதெல்லாம் , முன் ஜென்மத்திலோ என்று நினைக்கும் அளவிற்கு.. அவளை தாங்கிக் கொண்டிருக்கிறான் சஞ்சய். அவன் தன் மேல் காதல் கொண்டதை கூறியே திக்குமுக்காட செய்தவன்.. எப்படி எல்லாம் அவளோடு வாழ வேண்டும் என்று எண்ணினானோ.. அதை செயல் முறைப்படுத்தி , இதயம் முழுவதும் நிறைந்து வழிகிறான்.. இதைத்தான் தரையில் கால் பதியவிடாமல் தாங்குவது என்று சொல்வார்களோ.. அவள் மீது அவன் கொண்டுள்ள அக்கறைக் கண்டு அவ்வாறே நினைக்கத் தோன்றும் .
தாயைப் போல் பேறுகாலத்தில் மாமியார் தாங்கியிருக்க.. அவளது துயரங்கள் யாவும்.. மறைந்து உள்ளத்தில் பூரிப்பு மட்டுமே நிறைந்திருக்க.. கலையின் முகப்பொழிவும் கூடதலாகவே இருந்தது . ஆனாலும் இருவருக்கும் சிறு கருத்து வேறுபாடும் நந்தன் கீர்த்தியால் உண்டாகி இருக்க.. அத்தோடு இந்திரா தேவியையும் இணைத்து விட்ட காரணத்தினால், தன் மௌனத்தை கைவிடாதவளாய்.. அவன் அரட்டலுக்கு கலை கட்டுப்பட்டிருக்க.. சஞ்சய்யோ அவளது மௌனத்திற்கு அஞ்சியவனாய்..
தன்னவன் அருகிலே அமர்ந்திருந்தாலும்.. வெட்கம் கொண்டவளாய்.. நிமிர்ந்தே பாராமல் அரைமணி நேரத்திற்கு முன் வரை அவன் செய்யத செயல்களை அசைப் போட்டவளாய்..
ஜான்வியிடம் குழந்தையை கொடுத்து.. எடுத்து வைத்த பொருட்களை எல்லாம் ஒருமுறை சரி பார்த்தவளாய் இருந்த பொழுது..
" கனி.. கனி.. ஒரு நிமிஷம் உள்ள வா.." , என்று அழைக்க..
ஜான்வியை பார்க்க.. அவரோ நமுட்டு சிரிப்போடு இருக்கவும்.. " அத்தை.." என்று செம்மை ஏறியவளாய் சிணுங்கியவளின் செயலில்..
YOU ARE READING
நேசமே சுவாசமாய்
Romanceநேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்காக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு சகோதர்களின் திருமண வாழ்க்கையின் நிகழ்வுகள்.. வயது பருவத்தில் அடங்கா காளையாக , மனறம் போன போக்கில் தறநனதவனின்.. மனதில் விரும்பியவளிடம் தன் காதல...