நேசமே சுவாசமாய் - 26

221 18 2
                                    

மறுபடியும் காதலிப்போமா?

பகுதி - 26

மனைவியை அறையில் விட்டு , அலுவலகத்திற்குள் நுழைந்தவன் முதலில் அழைத்தது.. பாலாவிற்கு.. 

" இஸ் எவ்ரி திங் ஓகே.." என்றவனின் குரலா கொஞ்ச நேரத்தின் முன் மனைவியிடம் கெஞ்சிக் கொஞ்சிக் கொண்டிருந்தது என்று நினைக்கும் அளவிற்கு உறைந்தே வெளியே வர.. பாலாவிற்கும் அவன் முகம் காணாவிட்டாலும், அவன் நிலையை நன்கு புரிந்துக் கொண்டவனாய்..

"அதெல்லாம் பக்கா..  ஆர் யூ சேஃப்..", என்றான்

" ஹா..ஹா.. இந்த சஞ்சய்கேவா.." என்று சத்தமாக சிரித்தான் .

" டேய், சஞ்சய் இப்பவாவது சொல்லுடா.. நம்ம தேவ்வையும் அழைச்சிட்டு பூனே போறேன்னு சொன்னவன்.. என்ன டா பண்ணின.. அரைநேர மணி நேரத்தில் அடிப்பட்டு ஆஸ்பத்திரில கிடக்கிறான்.." என்று தன் சந்தேகத்தை கேட்ட நண்பனிடம்..

" போலீஸ்..  என்ன நானே ஆள் வச்சு போட்டு இருப்பேன்னு நினைக்கிறியா.. அந்த அளவு அவனுங்களுக்கு வொர்த் இருக்கறதா நினைக்கிற.. ரெண்டு வருஷம் உள்ள இருந்துட்டு வந்தவளுக்கே.. இத்தனை விஷயம் செய்ய முடியுதுன்னா.. அவளை சும்மா விட்டுடேனே நினைச்சுட்டே வெளில இருந்த நான்.. என்னென்ன செய்ய முடிவு செஞ்சிருப்பேன்.. எவ்வளவு தைரியம் இருக்கணும்.. ஒன்னுமில்லாம ஆக்குனதுக்கு அப்புறமும்.. இந்த நிகில்ல சீண்ட நினைச்சிருந்தா.. என்ன நடக்கும்ன்னு தெரிய வேணாமா..", என்றவனின் குரலில் அவ்வளவு ஆக்ரோஷம்.. அவனுடைய இந்த குரலே பேராபத்தென்றால்.. அவன் அதரங்கள் உதிர்த்த  நிகில் என்ற இந்த சொல்.. எங்கு சென்று முடியுமோ, இந்த தோற்றத்தை மட்டும் கலை பார்த்தால்.. அவனை நெருங்கி வர நினைப்பதற்கே, பல ஆண்டுகள் எடுத்திருப்பாள் .

க்ஷாக்ஷி என்ன செய்ய போகிறாள் என்று தெரியாத வரைக்குமே, சஞ்சய்க்கு சிறு பதற்றம் ஓடிக் கொண்டு இருந்தது. ஆனால், அவள் ஆரம்பப் புள்ளி அறிந்த பின், அவளுடைய போக்கை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமாக இல்லை. 

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now