நேசமே சுவாசமாய் - 15

266 19 6
                                    

வேகமும் தவிப்பும்

பகுதி - 15

சஞ்சய்யுடன் இணைந்து விட்ட பிறகு , கலையால் இங்கு வருவது என்பது இயலாமலே போனது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக , வட திசை நோக்கி அவள் பயணிக்கவே இல்லை.

அனைவரின் முகங்களிளும் இருந்த மகிழ்ச்சி தனக்கானது என்று.. நினைக்கும் பொழுதே.. எழுந்த சிலிர்ப்பை அடக்க வழித் தெரியாதவளாய்.. இந்திராதேவியின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும்.. அவளது நிலையான அன்பிற்கு இருக்கும் சக்திக்கு எடுத்துக்காட்டாய்..

எதிலோ படித்த வரிகளை நினைவு.. அந்த நிமிடம் அவளுள் ஆட்கொண்டது..

மரண வாசலை காண்பித்து மகிழ்ச்சி தந்து உறவு குழந்தை என்பதை தனக்கேற்றார் போல் மாற்றிக் கொள்ள தோன்றியது..

மரண வாசலை காண்பித்து உறவுகளை மீட்டெடுத்து, தந்த தேவதை.. மகிழ்ச்சி ஏற்படுத்திய தேவதை.. கரங்களில் தவழ்ந்திருப்பவள் என்று..

தங்களின் அறைக்குள் நுழைந்தவளுக்கு , கணவன் நடத்திய காதல் பாடங்களின் தாக்குதல்.. நினைவிற்கு வர , மென்னகை புரிந்தாள்.. படுக்கையில் தன் உடலை புதைத்துக் கொண்டு.. அலைபேசியை கரத்தில் எடுத்தாலும்.. அதில் மிளிர்ந்த தன்னவனின் புகைப்படத்தில் மெய் மறந்தவளாய்.. தன் கட்டை விரல் கொண்டு முகத்தை வருட.. மூடிய விழிகளுக்குள் வந்து இம்சிப்பவனின் அழகு முகத்தை.. தேவ்விடம் தேடியதை நினைத்தவளுக்கு.. தெரியாமல் தெரிந்த கண்களில் நீரின் பளபளப்பு..

"கலை , என்னாச்சு.. ஏன் நீ யோசனையாவே இருக்க.. பாரு பாப்பா உன்னை தேடுறா.." என்று ஜான்வி.. குழந்தையை அவளது கரத்தில் திணிக்க.. அவரின் வருகையால் , வேகமாக எழுந்து அமர்ந்து பெற்றுக் கொண்டாள் .

" எதுக்கு இத்தனை வேகம்.." என்று கண்டிக்கவே.. சிறு புன்னகையை உதிர்த்து , குழந்தைக்கு பசியாற்ற..

" என்னாச்சு.. நீ ஃப்ளைட்லேருந்தே சரியில்லை.. பெயின் அதிகமா இருக்கா.. ",என்றார் வாஞ்சையாக

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now