நேசமே சுவாசமாய் - 35

379 18 5
                                    

கத்தியில் குத்து வாங்கிய
அஷ்வந்

பகுதி - 35

நந்தனின் பார்வை கீர்த்தியை தவிர வேறெங்கும் அசையவில்லை.. அவன் கண்களில் வழிந்த , எச்சரிக்கையையும் மீறி ஏதோ ஒன்று.. அவளை இம்சித்துக் கொண்டிருக்க.. என்ன அது என்று புரியாமல் குழம்பித் தவித்தாள் .

அவனோ , எப்படி இவளால் எவனோ ஒருவனின் முன்னிலையில் , நிற்க முடிந்தது என்கின்ற கோபம்.. மாதங்கியிடம் பதில் அளித்தாலும் , அவனுடைய விழி வீச்சு என்னவோ.. அவளிடத்தில் மட்டுமாக.. அதை சந்திக்க இயலாமல் வேறுபக்கம் திருப்பிக் கொள்ள..

" கூடிய சீக்கிரம் எங்க வீட்டு பெரியவங்களோட வரேன்.. ஸாருக்கு தரகர் வேலையெல்லாம் வேண்டாம்..‌",  என்று அஷ்வந்தை முறைத்துக் கொண்டே கூற.. கலை நமுட்டு சிரிப்பை உதிர்த்து அஷ்வந்தை ஏறிட்டால்.. அவனோ , கொலைவெறியில் தாண்டவம் ஆட முடியாத நிலையில் நின்று கலையை முறைத்துக் கொண்டிருந்தான் . கீர்த்திக்கு சொல்லவும் தேவை இருக்கவில்லை.. நந்தன் அவளுக்காக அவனிடத்தில் பேசியதில் உச்சி குளிர்ந்தவளாய்.. புதிய பிரச்சினையை மறந்தவளாய் சந்தோஷமான முகத்துடன் வழி அனுப்பி வைத்திருந்தாள் . 

காரில் ஏறியதில் இருந்து கீர்த்தியிடத்தில் உண்டான கோபம் தொடங்கி.. அஷ்வந் வரை நீண்டிருந்ததில்.. வேகத்தை வாகனத்தில் காட்ட.. சிறிது தூரம் மட்டுமே அமைதியாக வந்தவள்.. காஃபி டே கடையை பார்த்ததும்.. அங்கு செல்லும் படி கூறவே.. எரிச்சலை மறைக்காமல் காண்பித்து.. அவளோடு , உடன் உள்ளே நுழைந்தாலோ.. அவர்களுக்கு முன்பே அஷ்வந்தோடு.. அவன் சாயலில் மற்றொரு பெரியவரும் இருந்தார் . 

" வாங்க அப்பா..", என்று இன்முகமாய் வரவேற்று.. அவர்களுக்கு எதிரே அமர்ந்தவள்.. நண்பனின் தோளையும் இடிக்க.. விருப்பமே இல்லாமல்.. இழுத்து வைத்த சிரிப்போடு நந்தன் அமர..

" எப்படி இருக்கீங்க.. நந்தன்.. ஐயம் டாக்டர் கேசவன்.. கீர்ததியோட தாய் மாமா.. இவனோட அப்பா..", என்று அறிமுகம் செய்யவும்.. தோழியின் முகத்தை பார்த்தாலோ.. இவனை எங்கே அவள் கண்டுக் கொண்டாள் .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now