வக்கிரத்தின் உருவம்
பகுதி - 17
" என் நித்திய தேடீட்டு வந்து இருப்பேன்னு சொன்னா.. நம்புவீர்களா நித்தி.." என்று அவன் உயிர் வரை தீண்டிய குரலில் இருந்து வெளி வர முடியாமல் திண்டாடி போனான் நிதின் ஷர்மா.
தேகம் முழுவதிலும் பரவிய இதம்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு.. செவிகளில் மோதிய.. அவளது ஏக்கம்.. அவனுடைய உணர்வுகளை மீட்டெடுக்க.. மிகவும் தடுமாறி போனான் .தன் கண்களில் மொத்த காதலையும் தேக்கிக் கொண்டு இறைஞ்சியவளின் நிலையை பார்த்த பிறகோ, அவனுக்கு, உடனே மதுவை தன் கரத்துக்குள் கொண்டு வந்துவிடும் அவசரத்தை.. எப்படி கட்டுப்படுத்திக் கொண்டான் என்றே புரியவில்லை . அழுகையால் சிவந்து துடித்த இதழ்களை தனக்குள்ளாக.. இழுத்து புதைத்துக் கொள்ளும் வேகம்.. ஆனால் எதையும் செயல்படுத்த தான் முடியவில்லை .
தன் மனைவியின் நடையில் இருந்த தளர்ச்சி கலையை நினைவுப்படுத்துவதாய்.. அலுவலகம் என்பதையும் மறுந்து கலை நிகிலோடு சிதறிய வார்த்தைகளுக்குப் பிறகு.. நடந்து சென்றதை நினைவுப்படுத்த , அதற்கு மேல் அவனால் நிமிடமும் அங்கிருக்க முடியாமல் போகவே.. தாமதிக்க இயலாமல்.. வெளியேறிய மனைவியை தேட.. அவளோ , தன் இருச்சக்கர வானத்தையும் மறந்தவளாய்.. நடந்தே அலுவலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தாள் .
தன்னை அதி வேகமாக உரசியவாறு நின்ற நான்கு சக்கர மகிழுந்தின் மீதும் கவனம் பதியவளாய்.. என்ன என்பது போல் பார்க்க.. அவனுடைய கண்களும் கலங்கியது.. இப்பொழுது இப்படி தவிப்பவள்.. அன்று ஏன் அவ்வாறு நடந்துக் கொண்டாள் என்று பழைய விஷயங்களும் அணிவகுத்து நின்றதில்.. அவனுக்கு பெரும் போராட்டமாகவே இருந்தது.
வேகமாக , கீழ் இறங்கியவன்.. அவளது கரத்தை பிடித்து.. முன் இருக்கையில் அமர வைத்து.. தானும் ஏறி அமர்ந்தான்.. அவளது முகம் காண.. கரை புரண்டோடும் காதலை கண்களில் தேக்கி துடித்துக் கொண்டிருக்க.. பெண்ணவளின் பார்வையில் இருந்த ஏக்கமும் சேர்ந்து.. கொஞ்ச நாட்கள் விலகியிருக்க.. வேண்டும் என்று அவன் நினைப்பு ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது .
YOU ARE READING
நேசமே சுவாசமாய்
Romanceநேசம் என்றால் என்னவென்று அறிமுகம் செய்தவளின் விருப்பத்திற்காக , விருப்பமில்லா திருமண பந்தத்தில் இணையும் இரு சகோதர்களின் திருமண வாழ்க்கையின் நிகழ்வுகள்.. வயது பருவத்தில் அடங்கா காளையாக , மனறம் போன போக்கில் தறநனதவனின்.. மனதில் விரும்பியவளிடம் தன் காதல...