நேசமே சுவாசமாய் - 40

163 12 3
                                    

வேகம் குறையாத இந்திரா தேவி

பகுதி - 40

தன் வெண்ணிற பட்டில் கம்பீரமாக அமர்ந்திருந்த இந்திராதேவியின் அறைக்குள் வர  , சஞ்சய்க்கு அனுமதியளிக்கப்பட.. தன் வேகம் குறையாதவனாய் நுழைந்தவனின் கம்பீரத்திலும் மிடுக்கிலும் , அவனுடைய தகப்பனை ஒத்திருக்க.. மகனைப் போன்று உருவத்தில் மட்டும் அல்லாது.. நடையிலும் , அவருடைய கம்பீரம் வெளிப்பட, அங்கிருந்த மற்றவர்களை மறந்தவராய் , சிலகணங்கள்.. இலயித்து இருந்தவரை, தீர்க்கமாக பார்த்தவனாய்.. அங்கிருந்த, அவனுக்கான இருக்கையில் அமருமாறு தன் கரங்களால் கட்டளையிட.. அங்கு, அவனோடு கூடியிருந்த அர்ஜுன் , ஜான்வி , நரேனும் அவனுடைய தந்தையும் இருப்பதை கண்டு.. காரணம் புரிந்தே இருந்தாலும் , அழைத்தவரே சொல்ல வேண்டியதை தொடங்கட்டும் என்று நினைத்தவனாக அமைதியாக இருக்க, இத்தனை ஆண்டு காலமாக , கட்டிக் காத்து.. பெருக்கிய சாம்ராஜ்யமே அழியும் நிலைக்கு சூழ்நிலை உருவான பொழுதும்.. விருப்பமே இல்லாமல் அர்ஜுனின் தூண்டுதலால் மட்டுமே.. நிகலை தொழிலுக்குள் அனுமதிக்க.. ஆனால் , அவனோ சில ஆண்டுகளிலேயே.. பல மடங்கு உயிர்த்தியிருந்தான் என்றாலும்.. இந்த நிமிடம் வரை, சில முடிவுகள் அவரால் மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது .

அவரைக் காண அனைவருக்கும் அழைப்புவிடுத்த பொழுது.. நுழைந்தவுடனேயே , ஏன் என்ற கேள்வி அனைவரிடத்தில் இருந்தும் பிறந்திருக்க.. நரேனின் விழிகளில் ஒருவிதமான இறுக்கமும் தென்பட்டது.. ஆனால் , சஞ்சய் இடத்திலோ.. வெகுவான நிதானம்.. நிதானம் என்பதை விட எதிரியை வீழ்த்த எடுக்கப்பட்ட முடிவின் மீதான அசாத்திய நம்பிக்கை.. அவன் உள்ளத்தில் , அடுக்கடுக்காய் உருவாகி வைத்திருக்கும் வியூகத்தின் மீதான உறுதி.. இவை அனைத்தும், அவன் முகம் பிரதிபலிக்காத போதும்.. பதுங்கும் வேங்கையின் செயலைப் பற்றி அறியாத முடியாத ஷர்மா குழுமத்தின் ராணி அல்லவே அவர்.. அவன் வயதில் , அவரும் தங்களில் தொழில்துறையில் பெண் புலியாய் வந்தவர் அல்லவோ..

சஞ்சய் நுழைந்து பத்து நிமிடங்கள் கடந்தும், அவர் பார்வைக்காகவும் வாய் திறவாமல் , அவரையே.. அவன் பார்த்திருக்க.. அவரே , தன் மௌனத்தை கலைக்க நேரிட்டது..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now