நேசமே சுவாசமாய் - 25

283 17 3
                                    

இருவரின் நேசம்

பகுதி -25

அவளை விட்டு விலகி.. அப்படியே, சரிந்து படுத்தவனாக.. " என்னை  அப்படியே கட்டி இழுக்குற டீ.. என்னையே மறந்து போயிட்றேன். பாரு.. கொஞ்ச நேரத்துல என்ன செய்ய இருந்தேன்.. ", என்று தரையில் ஒருக்களித்து.. கலையின் மேனியை முழுதாய் அழுத்தாமல் கையை ஊன்றி முகம் பார்த்தவனாக பேசியவனுக்கு.. மனைவியின் கண்களில் விரவி இருந்த வலியா அல்ல குழப்பமான பார்வையா என இனங்காண முடியாமல் , 

" என்னடா.. ஏன் என்னமோ மாதிரி பாக்குற.." என்று புரியாமல் கேட்டவன்.. மெல்ல அவளது முடியை ஒதிக்கியவனாக..

" நா ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே.." என்றாள்.. தயங்கியவாறே, 

" என்ன.." என்று மென்னகையுடன் கேட்ட ஆடவனுக்கு தெவிட்டவில்லை.. மனைவியின் அழகு..

" ம்.. அ‌..து.. அ..து‌‌.. இப்பவே எனக்கு நீங்க வேணும்னு தோணுது.." என்று திக்கித்திணறி ஒருவழியாக தன் மனநிலையை அவனிடத்தில் உணர்த்திவிட.. அப்படியே, அள்ளிக் கொள்ளவே ஆசைத் துடித்தது.. ஆனாலும், அவளது உடல்நிலை.. என்று யோசிக்கும் பொழுதே.. தன் முட்டாள் தனத்தை உணர்ந்தவன்‌.

" ம்ச்சு.. கனிம்மா.. எழுந்திரு.. என்ன நீ இப்படி மழைல நனைஞ்சிட்டு.. வா.. பாரு நானும் இவ்வளவு நேரமாக கவனிக்காம.. எழுந்திருடா.. " என்று பரபரத்தவனுக்கு மாறானவளாக.. அசையாமல் அப்படியே ,அவனால் கலைக்கப்பட்ட நிலையிலேயே இருக்க.. " என்னாச்சு.." என்று யோசனை எழுந்தாலும்.. கலையின் ஆழ்ந்த பார்வையை சந்திக்க முடியாதவனாய் கரங்களில் ஏந்திக் கொண்டு அறைக்கு விரைந்தவன்.. குழந்தையென மனைவியின் உடையை மாற்றி.. கூந்தலை ஹேர் டிரையால் காய வைத்து தானும் உடை மாற்றியவனாக.. வந்து அமர்ந்ததும்.. மீண்டும் , அவன் மார்பில் அவள் ஒட்டிக்கொள்ள..

" கனி.. கனி.. என்னடா..", என்றான் தவிப்பும் துடிப்புமாய்..

"ம்ஹும்.. ஒன்னுமில்லை, ஏன்.." என்று தெரிந்தே கேள்வி எழுப்ப..

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now