நேசமே சுவாசமாய் - 18

255 16 5
                                    

ஷாக்ஷியின் பலி வெறியும்.. மீராவின் தடுமாற்றமும்

பகுதி - 18

அலைபேசியில் கேட்ட சேதியில்.. தன் மேனியில் இருந்த எச்சைகள் அத்தனையும் வடிந்தது போல் ஓடியவன்.. நேராக நின்ற இடம் ஷாக்ஷியின் வீடு.. அதாவது மல்கோத்திராவின் இருப்பிடம்.. அவசர அவசரமாக உள்ளே நுழைந்து மாடியேற.. " இங்க வா.‌" என்று அதிகாரமான பெண் குரல் ஒலித்ததில்.. மல்கோத்திராவின் அறைக்குள் நுழைந்தாலோ..

இரத்த வெள்ளத்தில் தலையில் அடிப்பட்டவராய்.. குப்புற அவர் விழுந்து கிடந்தார் என்றால் , எதிரே இருந்த ஒற்றை சோஃபாவில் கையில் பூ ஜாடி போன்ற அமைப்பில் இருந்த அலங்காரப் பொருள் உடைந்து இரத்தக் கறையோடு இருக்க.. அவரையே வெறித்தவாறு அமர்ந்திருந்தாள் ஷாக்ஷிதா‌..

புத்திசாலி வேங்கையிடம் காணப்படும் சிறு மெத்தனமே போதும்.. தந்திர ஓநாய்கள் மிகச் சரியாகவே அந்த நேரங்களை பயன்படுத்திக்  கொள்வதற்கு.. அதேபோல் விதுரும் ஷாக்ஷிதாவும் மிக சாதுரியமாய் ஒருவருக்கும் அறியாமல் நிபந்தனை ஜாமினில் பெயரில் வெளி வந்திருந்தாள்.

விதுர் அந்த அறைக்குள் நுழைந்த உடனேயே , " செத்துட்டானா இல்ல உயிரோட இருக்கானான்னு பாரு.."  என்றாள்

" வாட் ஹேப்பண்ட் ஷா.. ஹீ இஸ் டெத்.." என்றான்.. மிக மிக அவசரமாக அவரை நெருங்கி பரிசோதித்து..

" வெல்.. ஹார்ட் அட்டாக்ல கீழ விழுந்து தலைல அடிப்பட்டு இறந்துட்டான்னு சொல்லீடு.." என்று முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காண்பிக்காதவளாய்.. ஆனால் கண்களோ அக்கினி குழம்பாக தகித்திருக்க.. மிரண்டே போனான் . ஏற்கனவே குணத்தில் சிறப்பான அம்சம் என்று எதையும் கண்டிட முடியாது.. ஆனால் இப்பொழுதோ.. இத்தனை ஆண்டு கால ஜெயில் வாசம்.. திறந்துவதற்கான இடமாக இல்லாமல்.. முழு மூர்க்கத்தனத்தையும் கேடு கெட்ட சிந்தனைகளையும் அவளுள் விதைத்து இருப்பதாய்..

" எஃப்ட்ரால்.. ஒரு வேலைக்காரியா கூட என் வீட்டுல இருக்க தகுதி இல்லாத ஒருத்திய என் முன்னாடியே பாராட்டுனா.. எப்படி விது.‌. வெறியோட காத்திருந்து வெளில வந்து இருக்கேன்.. என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்குனவங்களா.. அழிக்காம விடுவேனா.. களத்தில குதிக்கிறதுக்கு முன்னாடி.. முதல் பலி.. மாதாவுக்கு கொடுத்த முதல் பலி.." என்று அகங்காரமாக மொழிந்தவளை பார்த்ததில்.. அவனுடைய முதுகு தண்டே சில்லிட்டு போயிருந்தது .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now