நேசமே சுவாசமாய் - 48

909 14 2
                                    

கரைக்கடந்த கட்டுப்பாடு

பகுதி - 48

இல்லறத்தை நல்லறமாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பவர்களாக நரேன் மீரா.. இருவரும் இருக்க.. ' நான் சஞ்சய்யின் சகோதரன்.. அவ்வளவு எளிதாக என் வலியை உனக்கு காட்டாமல் இருக்க மாட்டேன்..' என்று சபதம் எடுத்தவன் போல் மதுமிதாவிடம் நடந்துக் கொள்ள தொடங்கிவிட்டான் நிதின்..

"புதிதாய் காதலிப்போமா.. ", என்று கேட்டு எதிர்ப்பார்ப்பை அவளுக்கு உருவாக்கி , அவள் செய்த செயல்களாலேயே திருப்பி அடிக்கத் தொடங்கிவிட்டான் .

பிடிவாதமாக , கலையின் முன் தங்களது நிலையை காண்பிக்க விரும்பாதவனாக நடந்துக் கொள்ள.. இவர்களுக்குள் நடப்பது எதுவும் அவளுக்கு தெரியாமலேயே போனது . ஏமாற்றத்தின் வலியை அவ்வளவு எளிதில் கடந்துவிட முடியாதவனாக , நிதின் இருந்தான் . தாயின் சுகத்தை தன்னவளிடம் தேடியலைந்த நாட்கள் அத்தனையும் பொய்யாய் போனது என்பது.. அவனுள் இந்த நொடிவரை ஜீரணிக்க இயலவில்லை..

ஆத்திரம் அறிவின் சத்ரு , நேசத்தை மொத்தமாக கொல்லும் உயிர்கொள்ளி.. ஆனால் , இது எதையும் நினைக்க மறந்தவனாய்.. நிதினின் செயல்கள்.. மதி தெரியாமல் செய்த பிழையை , இவன் தெரிந்தே செய்தான். இதுனால் வரை காதலா.. பலி உணர்ச்சியா.. என்று வகையறியாமல் தத்தளித்தவனுக்கு.. வெறியே மிகுதியாய் இருந்தது .

தரையில் இட்ட மீன் போல் உள்ளுக்குள் துடித்துக் கொண்டுயிருப்பவளுக்கும்.. கலையிடத்திலோ , மற்றவர்களிடத்திலோ.. சொல்லிக் கொள்ள விருப்பம் இல்லை . பிழைக்கான தண்டனை என்று எண்ணியவளாய்.. அவனால் , எழும் உயிர் வலியை பிறரிடம் மறைத்து ஆறுதலுக்காகவும் என்று மடி சாயாதவளாய்.. உறைந்திருக்கும் புன்னகையால்.. தன் மனக்காயத்தை மறைத்தவளாய் நடமாடிக் கொண்டிருக்கிறாள் . ஆனால், அதற்கும்.. நிதினில் குத்தல் பேச்சு.. பெரும் தாக்குதலாகவே , " அதான.. உனக்கு நடிக்கவா சொல்லிக் கொடுக்கனும்..", என்பான் .

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now