நேசமே சுவாசமாய் - 31

249 13 4
                                    

பகுதி - 31

அனைவரின் நிம்மதியை குழைக்கும் இவளை என்ன செய்தால் தகும் என்று சிந்தித்தவனாய் நந்தன் இருந்தான். பெற்ற அன்னையை விஷமாக கருதி.. அவன் ஒதிங்கி இருக்க.. இது புரியாமல், பிடிவாதமாக நல்லுறவை வேண்டி நின்றவளுக்கு, இந்த நிலையே உருவாகும் என்றால் எங்கே கேட்டாள் . இதோ, வேண்டியவர்களை ஒதுக்கி.. அண்டக்கூடாத நபரிடம் நல்லுறவை நாடும் மனைவியை என்ன செய்வது என்று தெரியாமல்.. அவள் கத்தியாக கீறிய வார்த்தைகளில் இருந்தும் வெளிவர முடியாமல்.. அதேசமயம், அவளை விட்டு பிரிந்து இருக்கவும் இயலாமல் திண்டாடுபவனின் நிலையை , எங்கணம் இவள் அறிவாள் என்று யோசித்தவனுக்கு.. சற்றுமுன் சாகவும் துணிந்த செயலால் செத்துக் கொண்டிருந்தான் .

தன் முகத்தை மூடிக்கொண்டு கதறிக் கொண்டிருப்பவளை , இழுத்து அணைத்தவனுக்கும் இதயத் துடிப்பு வேகமாகவே இருந்தது.

" ஏன் டீ.. சொன்னாவே புரிஞ்சுக்க மாட்டேங்குற.. அவங்க பேச்சை கேட்டதுக்கு, உன்னை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்கு பார்த்தியா.. நான் பொறந்தது கூட அவங்க கௌரவத்துக்காக.. தாய்ப்பால் கொடுத்தா அழகு போய்விடும்ன்னு நினைச்ச அல்ட்ரா மாடல் அம்மா டீ என்னுடைய அம்மா.. 30 வருஷம் என் மேல இல்லாத அக்கறை இப்ப திடீர்ன்னு வந்து குதிச்சிடுமா..", என்றவனுக்கு தாளவே இல்லை.. தன் அன்னையே தன் வாழ்விற்கு களைச்செடியாய் முளைத்திருக்கிறார் என்று கொதித்தவனாய்.

" பல தடவை சொல்லி இருக்கேன் என்னை வளர்த்தது.. என் சியாம்மாவும்.. என் சாரதா அத்தையும்.. நீ.. அவங்க சொல்றத கேட்கலேனா.. உன் பல்லை பேக்குற முதல் ஆள் நான்தான்.. ஆனா, நீ யார் பேச்சை கேட்க கூடாதோ.. அவங்க சொல்லறதை கேட்டு.. எந்த நிலைமைல நிக்குறேன்னு புரியுதா.. நீ மட்டுமாடீ நடுத்தெருவில நிக்குற.. என்னையும் என் புள்ளையையும் சேர்த்து.. மறந்து.. சாக துணிஞ்சிட்டேல.. அப்பவே , நான் செத்துட்டேன் டீ.. ", என்றவன்..

அழகான மல்லி முல்லை மலர்களாய் பூத்துக் குலுங்கி.. எங்கும் நறுமணம் வீசிக் கொண்டிருந்த தன் குடும்ப நந்தவனத்தில் , கள்ளிச் செடியாய் முளைத்திருந்த அன்னையை வெட்டவும் முடியாமல்.. வளரவிடவும் முடியாமல் திண்டாடிய நிலையில் நந்தன்.. இருந்தான் என்றான் மிகையில்லை.

நேசமே சுவாசமாய் Where stories live. Discover now