அத்தியாயம் 23

2.8K 196 24
                                    

பட்டு வேஷ்டி சட்டையில், மஹாவிற்கு இணையாக அழகாக மாற்றியிருந்தான் மேக்கப் மேன் செல்வம். வெளியில் நின்று சில போட்டோக்கள் எடுத்தார்கள். ஒருவரிடம் ஒருவர் மயங்கி நின்றது அந்த போட்டோக்களே சொல்லியது.போட்டோவிற்குகாக இருவரும் ஒருவர் கையை பிடித்து கொண்டு நடந்தாலும், ஏனோ கையை விட மனமில்லை. இருவரும் அப்பிடியே ஹாலிற்குள் நுழைந்தார்கள். பெற்றோருக்கும் அவர்களுடன் கூட பிறந்தவர்களுக்கு ஏனோ அவர்களை அறியாமல் அந்த இணைந்த கைகள் பூரிப்புடனான சிரிப்பை உண்டு செய்தது.

பூரணி ஹாலில் நுழைந்த மகள் பின்னால் சென்று "நல்லா மேக்கப் போட்டுருக்காங்கடீ..ஆமா இந்த நெக்லஸ் ஏதுடீ?" என்றாள் மெல்லிய தொனியில்.

"ம்..நீ வச்சிருந்த வைர நகை எல்லாம் சேர்ந்து குட்டி போட்டுச்சு" என்றாள் மகள் தோரணையாக. விக்ரமினால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அவன் சிரித்ததை காணவும் தாய் புரிந்து கொண்டாள்.மகள் தோளில் மெலிதாய் தட்டி "போங்க" என்றுவிட்டு தான் கீழேயே நின்று கொண்டாள்.

வந்தவர்கள் எல்லோரும் வாயார வாழ்த்திவிட்டு போனார்கள். மலரும் அன்னமும் ஒதுங்கி நின்று அவர்கள் உறவுகளுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். வந்தவர்களில் ஒரு பெண்மணி "ஏன் அன்னம், தம்பியை விட வயசு ரொம்ப கம்மியோ இந்த புள்ளைக்கு?" என்றாள்.

"இல்லக்கா, ரெண்டு வயசோ என்னவோ தான் கம்மி" என்றாள் அன்னம்.

"நல்லா அழகா தான் இருக்கா, குடும்பம் கூட உங்க அளவுக்கு பெரிய ஆளுக தான் போல..எப்பிடியோ நாள் கழிச்சாலும் நல்ல பொண்ணா புடிச்சிட்டே" என்றாள் அந்த பெண்.

அன்னம் பெருமிதமாய் தான் இருந்தது. மலரு உடனே "அது பங்ஷனுக்காக கொஞ்சம் மேக்கப் போட்டு இருக்காங்க அதனால அப்பிடி தெரியும் உங்களுக்கு" என்றாள்.

"ம்..ஆனாலும் ஒத்துக்க உனக்கு மனசு ஆகலை மலரு..நம்ம வீட்டு பிள்ளைங்க போடாத மேக்கப்பா, ஆனாலும் உன் தம்பி பொண்டாட்டி முகம் களையா தானே இருக்கு..அதை ஒத்துக்க" என்றாள் அந்த பெண்மணி விடாமல்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now