அத்தியாயம் 41

2.7K 190 37
                                    

பெரியவர்கள் எல்லோரும் ஒருவர் பின் ஒருவராக வந்து பேசிக் கொண்டு இருந்து விட்டு சென்றனர். மஹா ஒருவாராக சாயங்காலம் முழுவதுமாக கண் முழித்தாள். எல்லோரும் அவளை சுத்தி கொண்டார்கள். இரவு ஆனதும் விஷ்ணு இரவு சுமி இரவு உணவு எடுத்து வந்தாள்.

பூரணி, "வாம்மா" என்றவள் பேத்தியை கையில் எடுத்து "அடே குட்டி, இங்க பாரு உன் பெரியம்மா வந்திருக்காங்க" என்றவள் "அதை வைத்து விட்டு வாங்கிக்கம்மா" என்றாள்.

சுமி கொண்டு வந்ததை வைத்துவிட்டு குழந்தையை வாங்கி கொண்டாள்."உனக்கு வலி பரவாயில்லையா மஹா?" என்றாள்.சின்ன மகளை கொஞ்சி கொண்டே.

"ம்..பரவாயில்லை மெடிசன் எல்லாம் குடுத்திருக்காங்க.ம்ச்.." என்றாள் அலுப்பாக.

"எதாவது கொஞ்சம் சாப்பிடு, ஃபீடிங் ஆரம்பிச்சாச்சா?" என்றாள் சுமி.

"இப்ப வருவதாய் சொன்னாங்க" என்றாள் அலுப்பாய் திரும்பிக் கொண்டு.

சரியாய் நர்ஸ் வரவும்,"அம்மா, ஜென்ஸ் யாரும் வராமல் பார்த்துக்கோங்க, பாப்பாவை இங்க கொடுங்கம்மா" என்றபடி ஃபீடிங் சொல்லி கொடுத்து விட்டு சிறிது நேரத்தில் வெளியேறினாள்.

குழந்தை சற்று நேரத்தில் தூங்கி போகவும் மஹாவை சாப்பிட வைத்துகொண்டே யார் இரவு இருப்பது என்ற பேச்சு துவங்கியது.

மஹா எதுவும் பேசாமல் அவள் பாட்டிற்கு சாப்பிட ஆரம்பித்தாள்.பூரணி "என் மாத்திரையை விட்டுட்டு வந்திட்டேன்.அது பரவாயில்ல நான் சமாளிச்சுக்குவேன். நான் இருந்துக்கிறேன் இன்னிக்கு" என்றாள்.

அதற்குள் சாப்பிட்டு முடித்த மஹா,தட்டை சுமியிடம் கொடுத்துவிட்டு "நீ நாளைக்கு உன் மாத்திரை எல்லாம் ஒழுங்கா எடுத்துகிட்டு வந்து சேரு. இன்னிக்கு விக்ரம் சமாளிச்சுப்பாரு.சுமிக்கா விக்ரமை கூப்பிட்டு சாப்பிட சொல்லுங்க." என்றாள்.

"ம்..பார்த்தீங்களா..பரவாயில்லைடியம்மா எம்புள்ளையை நல்லா தான் வளர்த்து வச்சிருக்கே." என்றாள் அன்னம்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now