அத்தியாயம் 37

2.7K 182 30
                                    

அன்று காலை குளித்து முடித்து விட்டு வந்து கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து இருந்தவளிடம் விக்ரம் அன்று அவன் போக வேண்டிய இடங்களை பற்றி சொல்லி கொண்டிருந்தான். அவனுக்கு ம் சொல்லிக் கொண்டே போனில் எதையோ நோண்டிக் கொண்டிருந்தாள்.

"அழகி, நான் பேசுறதை கேட்கிறீயா?" என்றான் விக்ரம்.

"ம்..நல்லா காதுல விழுது தங்கம்..மத்தியாணம் லஞ்ச்க்கு வந்திருவே தானே?" என்றாள் அவள்.

"ம்..வந்திருவேன்..லேட்டான எனக்காக வெயிட் பண்ணாமே நீ சீக்கிரமா சாப்பிட்டு விடு..சரியா?" என்றான்.

"ம்" என்றவள் போனை மூடி வைத்தாள்.

"அப்பிடி என்ன போனில் சுவாரசியமா இருக்கு?" என்றான் பர்ஃப்யூம் அடித்து கொண்டே.

"அது ஒரு மார்னிங் ஜூஸ் ரெசிப்பீ" என்றாள்

"சரி நான் கிளம்புகிறேன்" என்றபடி வெளியேற போனவனிடம்.

"ஹலோ , அப்ப யாரு என்னை கீழே கூட்டிட்டு போவா?" என்றாள்.

"ஸ்ஸ்.. ஸாரி என் அழகீ.."என்றபடி அவளிடம் வந்தவன், அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டுவிட்டு, அவளுக்கு மெதுவாக தரையிறங்க கை கொடுத்தான்.

எழுந்து நின்றவள் "ம்ஹும்..உன் கூட இறங்கி கீழே வருகிறேன்னு சொன்னதுக்கு ஒரு தேங்க்யூ கூட சொல்லிருக்கலாம். நீ போட்டு இருக்க செண்ட் வேற அப்பிடியே தூக்குது போ." என்றாள் அவனோடு சேர்ந்து ரெண்டு எட்டு நடந்தபடி.

"அதெல்லாம் அக்கௌன்டில் போட்டு வச்சுக்கோ அப்புறமா தருகிறேன்." என்றான் அவன் மெலிதாக சிரித்து கொண்டே.

"ம்..டயம், டேட், இடம் எல்லாம் தெரிஞ்சா நல்லாயிருக்கும்." என்றாள் குறும்பாய் பாவமாய் முகத்தை வைத்து கொண்டு.

கடகடவென சிரித்தான் விக்ரம்.

"அய்யோ சிரிச்சு கொல்லுறானே" என்றாள் அதற்கும் விடாமல்.

"என் அழகான அழகீ..நான் சாப்பிட்டு கிளம்பணும். கொஞ்சம் சீக்கிரமா இறங்கலாமா?" என்றபடி மெதுவாய் அவளை மாடியில் இருந்து கீழே இறக்கி கூட்டி வந்தான்.

அன்புடை நெஞ்சம் கலந்தனவேWhere stories live. Discover now