காலையில் எழுந்து காபி போட்டு கொண்டிருந்தாள் மஹா.விக்ரம் எழுந்து அருகில் அவள் இல்லாததை பார்த்துவிட்டு எழுந்து கதவருகே வந்தான்.சிறிது நேரம் நின்றவனை அவள் குரல் கலைத்தது.
கையில்லாத பனியன், முட்டி வரையிலான குட்டி ட்ரவுஸர், மூடியை தூக்கி க்ளட்ச் இட்டு இருந்தாள்.
"லுக் எல்லாம் நல்லா தான் இருக்கு..போ, போய் முதல்ல ப்ரஷ் பண்ணிட்டு வா. ஆமா உனக்கு என்ன காபியா? டீயா? இல்ல வேற எதுவும்" என்றபடி அவன் பக்கம் திரும்பினாள்.
அவளை கண்களால் விழுங்கி கொண்டிருந்தவன் "உனக்கு என்ன பிடிக்கும் ,நீ எது நல்லா செய்வே?" என்றபடி.ஒரு முன்னாடி வைத்தான்.
"இன்னொரு அடி எடுத்து வைத்தால் உதை படுவே ராஸ்கல்,பாத்ரூம் சைடில் இருக்கு, எனக்கு காபி தான் பிடிக்கும், உனக்கு என்ன வேணும்னு சொல்லிட்டு அந்த பக்கம் போ" என்றாள்.
கிறக்கமாய் அவளை பார்த்துவிட்டு, "அப்ப உன்னோட காபியே போடு" என்றபடி பாத்ரூமிற்குள் போனான்.
மெலிதாக சிரித்து கொண்டு "சிரிச்சே நம்மள காலி பண்ணுறான்,கேர்புல்லா இரு மஹா." என்று தனக்கு தானே சொல்லி கொண்டு காபியை போட்டு இரண்டு மக்கில் ஊற்றி ஒன்றை ருசித்து பார்த்தாள்.
"ம்..ஹா.. நீ செம டீ மஹா...அப்பிடி இருக்கு" என்றவள் அவன் வெளியில் வரும் சத்தம் கேட்கவும் அவன் கப்பை எடுத்து அவன் கிட்சன் வரும் போது "இந்தா" என்று நீட்டினாள்.
"இது?" என்று மேடையில் இருந்த கப்பை காட்டினான்.
அவனை ஒரு மாதிரி பார்த்தவள், "அது என்னோடது,உனக்கு இந்தா" என்றாள்.
அவள் கையில் இருந்த மக்கை அவனிடம் நீட்டியபடி.
அதை கையில் வாங்கியவன், கீழே இருந்த மக்கில் இன்னும் கொஞ்சம் ஊற்றி கொண்டுஅவன் கையில் இருந்ததை கீழே வைத்து விட்டு கீழே இருந்த அவள் குடித்த மக்கை எடுத்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் வந்த ஒரு காலை மடக்கி கொண்டு அமர்ந்தான்.
YOU ARE READING
அன்புடை நெஞ்சம் கலந்தனவே
ChickLitஎங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா...