போட்டி #1 - 13. மர்ம அறை

100 12 2
                                    

அக்காலத்தில் காவியாபுரத்தை கார்மேகன் மன்னன் ஆட்சி புரிந்தான்.

மன்னரின் அரண்மனைக்குள் பாழடைந்த  அறை ஒன்று இருந்தது , அது கார்மேகனின் மூதாதையர் காலத்தில் பூட்டப்பட்டது.

பேய்களின் பிறப்பிடமென சித்தரிக்கப்பட்ட அந்த அறைக்குள் யாவரும் செல்வதில்லை.

அறையின் மர்மத்தை உடைப்பவருக்கு தக்க சன்மானம் என்றார் மன்னர் .

அறைக்குள் சென்ற சிலர்
துர்நாற்றத்தையும் எலும்புகூடுகளையும் பார்த்து கதரியோடினார்கள்.

ஆனால் ஆதித்யனோ அறைக்குளே முன்னேறினான்.

ஒற்றடை , எலும்புக்கூடுகள் , தாயத்து என அறைமுழுவதும் அம்மானுஸ்யம்.

பயத்தில் இருந்தவனின் கால்களை ஒரு பேழை தடுத்தது.

பேழையின் மேலிருந்த ஓலைச்சுவடியை எடுத்தான், அதில்  கேள்விக்கு பதிலளித்து பெட்டியை திறந்துக்கொள் என்றிருந்தது.

அடுத்த பக்கத்தில் "இங்கிருக்கும் குவலையில் உள்ள பொருளின் எண்ணிக்கையை எழுது" என்றிருந்தது .

குவளையை பார்த்தவன் அதிர்ந்தான், அதில் இருந்தோ மணல்.

சற்று சிந்தித்தவன் 2345 என பேட்டியின் மேல் எழுதினான்.
பேட்டி திறந்தது. அதிலிருந்த மற்றோரு ஒலைச்சுவடியை பிரித்தான் .

அதில் சமயேகிதக புத்தி பெற்றவனுக்கு இப்புதையல் சமர்ப்பணம் என எழுதப்பட்டிருந்தது.

Contest EntriesWhere stories live. Discover now