பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னே
யாதும் ஊரே யாவரும் கேளிர்
_____________________________________________________________________________
“ஏய் என்னாடி இதுக, ன்னா தெர்யும் இதுகள்கு கட்லபத்தி”
______________________________________________________________________________
இசை , பாரதி காணாத புதுமை பெண், சமச்சீர் முகம் , சக மனிதனை நேசிப்பவள் , இன்று கடலோரம் பிணமாக...
நேற்று அதிகாலை ,
விண்மீனும் விடை பெற்றது ,
நிலவு துயில் கொள்ள வீடு கிளம்பியது
கதிரவன் கடல் காண வந்ததது
கரை கண்ட கூட்டம் கலங்கரை விலக்கம் தேடியது
அந்த கூட்டத்தில் இசையும் ஒருத்தி , இன்னும் பத்து நாளில் திருமணம், அப்பாவை எதிர்த்து , தன் காதலை நிலை நிறுத்தியவள் , சாதி மறுப்பு திருமணம் ,போராட்டம் அவளுக்கு புதிதல்ல , இம்முறை சற்று வித்தியாசமாக.
அவனுக்கும் தான் , இங்கு இவளுக்காக அவன்.
நெடியதோர் போராட்டம் , உளமும் உடலும் களைத்திருந்தது.நடிகர்கள் போரட்டகாரர்களுடன், பாவம் இம்முறை லைவ் டெலிகாஸ்ட் முன்னே, அரிதாரம் பூச நேரம் இல்லாமல். முன்பொழுது வரை நன்றாக தான் பேசினர், சுனாமிக்கு முன் விலங்குகள் இடம் பெயருமாம், உண்மை தான் , மைக் பிடித்த விலங்குகள் கூடு சென்று இருந்ததன.போரட்டத்தின் பயனாளர்கள் தேவையை புசிக்க தயாராகி போராட்டம் கைவிட்டனர்.
ஏதோ ஒரு வழயில் , புரட்சி போரட்டத்தின் பயன்களை இவர்கள் யாவரும் அனுபவித்தே இருந்தனர்.
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...