சென்னையில் வசித்து வந்த நிர்மல் நித்திலா தம்மதியினர் தங்கள் இளவரசி
நிலாவுடன் பொங்கல் விடுமுறையை தங்கள் குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாட தங்கள் சொந்த ஊரான தஞ்சை யை நோக்கி புகை வண்டியில் பயணத்தை துவங்கினர்.
"அம்மா நம்ம எப்போமா பாட்டி வீட்டுக்கு போவோம்."நிலா.
"இன்னும் கொஞ்ச நேரம் தான்டா செல்லம் போயிடலாம்."நித்திலா.
"நம்ம மட்டும் ஏன் மா சென்னை ல இருக்கோம்,நம்ம பாட்டி தாத்தா கூட வே இருக்கலாம் ல,இங்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா?"
"புரியுதுடா,எனக்கும் உங்க பாட்டி தாத்தா கூட இருக்க ஆசை தான்,அத விட்டு இங்க வந்து தனியா கஷ்டப்பட எனக்கும் புடிக்கல கண்ணா.ஆனால் உங்க அப்பாவுக்கு இங்க தானே வேலை இருக்கு,இத விட்டுட்டு அங்க போய் நாம என்ன பண்றது மா?" என்று கவலையுடன் கூறினார் அவளது தாய்
வேகமாக தன் தந்தை பக்கம் திரும்பிய நிலா," அப்பா நீங்க ஏன் தாத்தா மாதிரி விவசாயம் பண்ணாம ஏன் பா நீங்க மட்டும் வேற வேலை பாக்குறீங்க?"
"தப்பு தான் டா எனக்கு அப்ப அதோட அருமை தெரியல எங்க அப்பா விவசாயி னு சொல்றதுகே நான் யோசிச்சு இருக்கேன்.ஆனா இப்ப அதோட அருமை தெரியும் போது என்னால அதுல ஈடுபட முடியல 'என்று தன் வருத்தத்தை தெரிவித்தான் நிர்மல்.
"போங்கப்பா நீங்க மட்டும் தாத்தா கூடவே வேலை பார்த்து இருந்தீங்கன்னா இப்ப நம்ம எல்லாரும் ஒன்னா சந்தோஷமா இருந்துருக்களாம்,தாத்தா எனக்கு தினமும் நிறைய கதை சொல்வாங்க,பாட்டி என்னை கோவிலுக்கு கூட்டிட்டு போய் எனக்கு நிறைய தின்பண்டம் வாங்கி தருவாங்க, சித்தப்பா , சித்தி , தம்பி பாப்பா எல்லாரு கூடவும் இருத்துருக்களாம்." என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியது அந்த பிஞ்சு.
ரயில் நிலையத்தை வந்தடைந்தவுடன் வேகமாக தன் தாத்தா வை பார்த்து விட்டு அவரை தாவி அனைத்துக்கொண்டது அந்த பட்டுக்குழந்தை.
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...