தஞ்சாவூர், ஆகஸ்ட் 15, 2034
மாலை 5 மணி
கிருபாகரன் ஒரு குடிசையில் படுத்த படுக்கையில் கிடக்க, அவர் மகன் திருநிறைசெல்வன் கோபமாக வீட்டின் உள்ளே நுழைந்தான். வீடு முழுவதும் குப்பையாக குவிந்து கிடக்க! அந்த குப்பைகளின் நடுவில் மூச்சு விடக்கூட சிரமம் கொண்ட ஒருவராய் படுத்திருந்தார் கிருபாகரன்.
கிருபாகரன் ஒரு அறிவியல் ஆராய்ச்சியாளர். எந்த ஒரு பொருளை அவர் உற்று நோக்கினாலும் போதும், அதனை வேரு எப்படியெல்லாம் புது விதமாக பயன்படுத்தலாம் என்று யோசிக்க தொடங்கி விடுவார்.
ஒரு வாரத்திற்கு முன்பு,
இந்த முறை அவரது ஆராய்ச்சி, ஒரு தேனீர் சுடு குவளை .(FLASK) வைத்து பூமியின் ஆழத்தை கணக்கிடுவது. அதுவே வினை(ய்)யாக இப்பொழுது கட்டிலில் முடங்கி கிடக்கிறார் கிருபாகரன். தேனீர் குவளையை வேறு எவ்வாரெல்லாம் புதிதாக பயன்படுத்தலாம் என்று யோசித்த கிருபாகரன்., ஒரு புது யுத்தியை கையாள ஆரம்பித்தான்.
கிருபாகரனின் அறிவியல் ஆராய்ச்சிக்கு எந்த ஒரு பண ரீதீயான ஆறுதல்களும் கிடைக்கவில்லை. அதனால் தனக்கென்று ஒரு குடிசையை போட்டுக்கொண்டு அறிவியல் ஆராய்ச்சிகளை செய்தார். ஆம், அவர் மகனும் அவன் மனைவியும் கிருபாகரனை துச்சயமாய் நினைத்து உதறிவிட, கிருபா அந்த குடிசையிலே தஞ்சம் அடைந்தார்.
அவர் எந்த ஒரு பொருளை பற்றிய புது ஆராய்ச்சியை தொடங்கினாலும் சரி, அந்த குடிசையில் ஒரு பூஜையை போட்டு தான் ஆரம்பிப்பார். அந்த குடிசைக்கு அருகில் ஒரு மயான கரையும் உள்ளது. அந்த தேனீர் சுடு குவளை ஆராய்ச்சியை தொடங்கினார் கிருபாகரன். முன்பே அதற்கான ஒரு திட்டத்தையும் வடிவமைத்திருந்தார்.
அந்த சுடுகுவளையை பூமிக்கடியில் புதைக்க வேண்டும். அதன் அடியில் ஒரு துளை ஒன்று போட வேண்டும். பின் வேதி பொருள்களை ஊற்ற வேண்டும். அந்த வேதி போருள்கள் ஒன்றோடு ஒன்று வேதி வினை புரிந்து பின்! அது பூமியின் நிலத்தடியை பிளந்து கொண்டு உள்ளே செல்லும். இதனால் பூமியின் மேலே இருந்துக்கொண்டே தண்ணீர் எவ்வளவு தூரம் வரை இல்லை என்பதை தெரிந்துக்கொள்ளலாம் மீட்டர் மூலம் என்ற ஒரு தீய செயலுக்கு துணை சென்றார் கிருபாகரன்.
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...