வருடமெல்லாம் வசந்தமாய்
வான் வீதியின் மேகமாய்
சிலிர்த்திடும் பனித்துளியாய்
புத்தாண்டில்ப்பூத்த புது மலராய்
நீ என்னுள் மலர்ந்து
நான் உன்னுள் கரைந்தேன்..!
இனி பூத்துக் குலுங்கட்டும் புது வசந்தம்
புது வருடம் மனம் வருடி
எழில் கொஞ்சிட
என் மனம் திருடி மறைந்தவளே..
மறவேன் உன்னை மனம் முடித்து
தினம் மகிழ்வோம் மண்ணுலகம் புன்னகை பூக்க.!!
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...