இந்த வருடம் கழியும் பொழுது
உன் கவலைகளும் கழிகிறது -நீ
அதை மட்டும் நினைத்துக் கொண்டு
நாளைக்கு நீ முன்னேறு!புது வருடம் பிறக்கும் பொழுது
புது மனிதனாய் பிறந்திடனும் - நீ
பழையதை ரசித்து புதியதை மதித்து
வாழ்வை ரசிக்க பழகிடனும்!ஆறும் ஏழும் மாறுவது! ஓ!
எண்கள் மாற்ற இல்லையே!- இந்த
இரவும் பகலும் மாறுவது! ஓ!
நிலையது எதுதான்? சொல்லவே!ஞானப்படி பார்த்தால் நம் எல்லோர்க்கும்
எந்த ஆண்டும் நல்லாண்டே - இதனை
புரிந்த கொண்டு நீ நடந்து
வாழ்வில் வாழு புவியாண்டே!வருடம் வருடம் இறுதியிலே நமக்கு
வருவது வெறும் புத்தாண்டு- ஏனோ
மாறுதல் என்பது இங்கில்லை நம்
வாழ்வோ தெரியா அணுகுண்டு!மாறுதல் இங்கே வரும் வரைக்கும்
புத்தாண்டின் சுகம் அடைவதில்லை - இந்த
பழைய ஆண்டின் பாரத்தை சுமந்துகொண்டு
நடந்து செல்கிறோம் வழியேயில்லை!*********************
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...