காசு சரியா பாத்து வாங்கிட்டு வந்துருய்யா.. எனக்கு உடம்பு முடிஞ்சா நானே போயிருப்பேன் உன்ன சின்னப் பயனு ஏமாத்த பாப்பானுவோ, இருபது ரூபாவாங்காம தேன் கொடுத்துராத.. யாருமில்லாஅந்த ஒத்தையடி பாதையில்மாரிக்கு அவன்அன்னையின் வார்த்தைகள்மட்டும் துணையாய் வந்தன.டவுனுக்கு போகும் வரைஅவள் சொன்னவார்த்தைகளை நினைத்துக்கொண்டே தான் சென்றான் உங்கப்பா இப்ப இல்ல, நீதான் ராசா நம்ம வீட்டுக்கு ஆம்பள, விவரமா இருக்கனும்..! தன் தோளில் தொங்கி கொண்டிருந்த தேன் பாட்டிலை இழுத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டான். மாரியின் ஊர்மலை மேலிருக்கும் ஓர் குக் கிராமம் தேன் எடுப்பதுதான் மாரியின் குடும்பத்தொழில் கயிறு கட்டி மலைமீதேறி உயிரை பணயம் வைத்து தான் வாழ்க்கை ஒடுகிறது அந்த ஆட்டத்தில் நிலை தணுமாறி தான் இவன் அப்பா இறந்துபோனார். இப்போது இவன் அம்மா தான் மலை ஏறி குடும்பத்தை காப்பாற்றுகிறாள். பத்து வயதே ஆனாலும் மாரி மலை ஏறுவதில் கெட்டிக்காரன்.இவன் தான்இக் குடும்பத்தின் எதிர்காலம்.தன் அம்மாவின் வார்த்தைகளை எல்லாம் நினைத்துக் கொண்டே ஒருவழியாக டவுனைவந்தடைந்தான். தேன்வாங்கி கலப்படமாக்கிவிற்கும் குமரேசன் கடயை அடைந்து அவனிடம் தேன்பாட்டிலை கொடுத்தான்.
அவன் மாரியை ஏற இறங்க பார்த்துவிட்டு
"என்னல உங்க அம்மைக்கு உடம்பு சரியில்லையாமே அதான் நீ வந்திருக்கியோ..!"
சொல்லிக் கொண்டே தேனை வாங்கி உள்ளே வைத்துவிட்டு பத்து ரூபாய் கொடுத்தன்.
" ஆத்தா இருபது ரூவாவாங்கியார சொன்னுச்சு..மீதி பத்து ரூவா.." என்றுஇழுத்தான் மாரி.
" உங்கம்மா ஆயிரம் கூடசொல்லுவா.. அதெல்லாம் தரமுடியுமா.. நீ கொடுக்ற இந்த ஒன்றையனா தேனுக்கு"
"அண்ண.. நீ நான் சின்ன பையன்னு ஏமாத்த பாக்குற..இருபது ரூவா கொடு"
"உன்ன ஏமாத்தி நான் வாழுறனா.. பிச்சகாரபயலுக்கு இவ்ளோ திமிரா..! "விறு விறு வென உள்ளே சென்று தேன் பாட்டிலை மாரிகையில் திணித்தான் "இந்தாடா உன் தேன் நான் குடுத்த பத்து ரூவாய கொடுத்துட்டு ஓடுடா.. நான் இல்லாம எவன் இத வாங்குறான்னு பார்க்குறேன்"
YOU ARE READING
Contest Entries
Randomபோட்டிகள் என்ற புத்தகத்தில் வைக்கப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற கதைகள் இந்த புத்தகத்தில்...