போட்டி#3. 8 - பேரழிவு

49 8 3
                                    

"கொஞ்சம் வழி விடுங்க!" என ஒரு குரலைக் கொடுத்த அவன் அந்த விஞ்ஞானிகள் கூடி இருந்த கூட்டத்தினிடையே புகுந்தபடி நடக்கலானான். அவன் நடக்கும் போது எழும் சத்தத்தை கேட்டதுமே அந்த விஞ்ஞானிகளின் கூட்டம் இது அவன் தான் என்பதை அறியாமல் இல்லை. விஞ்ஞானிகள் என இங்கு சொன்னது தற்காலத்தில் விஞ்ஞானிகளாக சாதனை புரிபவர்களை அல்ல.. கூடிய விரைவிலேயே தங்கள் சாதனைகளை உலகுக்கு முன் வைத்து எதிர்காலத்தில் விஞ்ஞானிகளாக பெயர் பதிக்க காத்திருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் அறைகளினுள் தம் கண்டுபிடுப்புகளை நடாத்திப் பார்க்க அலை மோதிய நேரம் அது.

வெள்ளை நிற சுவர்கள் நான்கு புறமும் சூழ்ந்த ஓர் நீண்ட வழி நடுவே நடந்து சென்றான் அவன். அந்த கட்டடத்தில் இருந்த ஒரு ஜன்னல் வழியாக வந்த காற்று அவனுடைய கருமை பொருந்திய தலைமுடியை அசைத்தபடி கடந்து சென்றது. தன் அறையின் வாசலை அடைந்த அவன் இது அவனுடைய அறைதானா என ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொண்டான். கதவை மெல்லத் திறந்து உள்ளே சென்ற அவன் அறையின் கதவை மூடிக்கொண்டான்.

வெள்ளை நிற சுவர்களை கொண்டிருந்த அவனது அறை பெரியதாக இல்லை என்றாலும் மிக சிறியதும் அல்ல. விஞ்ஞானி ஒருவரின் அறையினுள் இருக்க வேண்டிய சகல பதார்த்தங்களும் இரசாயன சோதனைக் குழாய்களும் அழகாக சுவரோரமாக இருந்த இரும்பு மேசையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவன் தானே உருவாக்கிய சில இரசாயன கலவைகளும் அங்கு ஒரு இடத்தைப் பெற்றிருந்தன. அவை அனைத்தையும் அவன் விட்டுட்டு அவன் தன் முன் இருந்த ஆய்வு மேசையில் இருந்த அதனையே பார்த்தான்.

அதனைப் பார்த்ததும் அவனுக்குத் தோன்றியதோ இது சரி தான் என்பதே. "ஆனால் சரியில்லை என்று என் மனம் கூறுகிறதே.. இது சரி தானா??" என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். அவனுக்குள் அவனை ஆட்சி செய்து கொண்டு இருந்த ஆர்வம் அவனுக்கு தைரியம் ஊட்டினாலும் ஏதோ ஒரு மூலையில் அவனுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது.

Contest EntriesWhere stories live. Discover now