போட்டி 9 # 10 காதல் கானல் நீர்

85 9 2
                                    

குழு அ (ஒரு பெண்ணின் கண்ணனோட்டத்தில்):

திருமணத்திற்கு முன்:

கணமும் காதல் என் இருவிழி சேர்கையில்

மனம்,மனம் அதிலே திளைத்திடுவதேனோ?

இரண்டெனக் கலக்கும் இருதயக் காதல் 

மலர்ந்திடும் முன்பே சொக்கித்தவல்வதும் ஏனோ?

ஜென்ம ஜென்மமாய் அவன் விரல் பிடித்திட 

இனி,இனி கசந்திடுமோ?

இருள்,இருள் மறித்திடும் வெளிச்சம் 

இனி அவன் விரல் பிடித்திடுமோ?

உறவின் உயிரென...

துடி,துடித்திடும் இருதயத் தடம் 

இனி அவன் இமைகளில் துடித்திடுமோ?

இஜ்ஜெனனம் ஜெனித்த நேரம் 

அவன் வரமும் பலித்திடுமோ?

நாணித்திரியும் தேகம் -அவன் 

உயிருடன் பினைந்திடுமோ?

விழியினில் விழுந்திடும் தூசி தனில் 

உன் முத்தம் கலந்திடுமோ?

அதனால்தான் கண்கள் அதில்

கண்ணீர் வழிந்திடுமோ?

சிறு இன்பம் கிடைத்திடவே 

உன் வரவை நான் அறிந்தேன்..!

சிறு துக்கம் பெற்றிடவே 

உன் பதிலை நான் அறியேன்..!

எழும் காதல் வென்றிடவே 

விழும் கண்ணீர் துடைத்திடுவேன்...!

திருமணத்திற்குப் பின்:

உன்னில் நானும்...என்னில் நீயும் 

இணைந்திருக்கத் தேவை இல்லை

நானும் உன்னை மணந்திருக்கத் தேவை இல்லை

திருமணம் வரை உன்னுடன் இருந்த என் மீதான காதல்

திருமணதிற்கு பிறகு சிறிது சிறிதாய் களைந்து போனது

உன்னோடு வாதம் செய்தே என் நாட்கள் போனது..!

Contest EntriesWhere stories live. Discover now