சீதா படுத்து வெகு நேரம் ஆகியும் உறக்கம் வரவில்லை. புரண்டு படுத்தவளின் கண்களில் பட்டது சற்று தொலைவில் சுவற்றில் இருந்தது ராமின் சிறுவயது புகைப்படம் அருகிலேயேஇப்பொழுது இருக்கும் புகைபடமும் இருந்தது . எழுந்து அதன் அருகே சென்றாள்.
சீதா(m.v) :சின்ன வயசுல எவ்ளோ அமைதியா நல்ல புள்ள மாதிரி இருக்காரு பால் வடியுது முகத்துல தூக்கி வச்சி கொஞ்சனும் போல இருக்க ஆனா இப்போ தாடி எல்லாம் வச்சிட்டு நல்லாதான் இருக்காரு ஆனா அந்த குழந்தை தனம் மிஸ்ஸிங்.
ராம் :தூங்காம என்ன பண்ற
சீதா ராமின் குரல் கேட்டு அதிர்ந்து திரும்பி பார்த்தாள்.
சீதா :என்ன நீங்க இன்னும் தூங்கலயா
ராம் :நான் தூங்கிட்டு தான் இருந்தேன் திடீர்னு முழிப்பு வந்துச்சு பாத்தா நீ தூங்காம என் போட்டோவை பார்த்துட்டு இருக்க.
சீதா :இல்ல சும்மாதான் பார்த்துட்டு இருந்தேன் பாப்பா போட்டோல அழகா இருக்கீங்க அப்டியே தூக்கி வச்சி கொஞ்சலாமான்னு இருக்கு
ராம் :இப்போ எப்படி இருக்கு
சீதா :டு பி ஹானஸ்ட். உங்கள ஒரு வாட்டி பாக்கலாம். அது உங்க பியர்ட் அதிகமா இருக்கு கொஞ்சம் ஷேவ் பன்னிங்கன்னா செம்மயா இருக்கும்.
ராம் :உன்னோட அறிவுரைக்கு நன்றி இப்போ தூங்கலாம்
சீதா :சரிங்க
அடுத்த நாள் காலை 8 மணிக்கு எழுந்தாள் சீதா. எழுந்து மணியை பார்த்தவள் பதட்டமாக எழுந்து குளியல் அறைக்கு செல்லும்போது ராம் இடையில் வர இருவரும் தடுமாறி விழுந்தனர் ராமின் மீதிருந்து சீதா எழுந்தாள்.
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு