ராம் வீட்டை விட்டு வெளியே வரும்போது கிட்டதட்ட மொத்தமாக உடைந்து போனான். சீதா காரை ஓட்ட ராம் அமைதியாக இருந்தான்.
ஹாஸ்பிடல்
டாக்டர் :உங்க வைப் இப்போ நல்லா இருகாங்க டெலிவரிக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கு சோ நீங்க பயப்படாம வீட்டுக்கு போங்க அப்புறம் எப்போ அவங்களுக்கு வலி வந்தாலும் கூட்டிட்டு வந்துருங்க
ஜெய் :சரி டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்
டாக்டர் :இது என் கடமை
டாக்டர் வெளியே சென்று விட்டார்
நிரஞ்சனா :என்னங்க மாமா அக்கா எங்க
ஜெய் :அவங்கள நான்தான் லேட் ஆகுதுன்னு வீட்டுக்கு அனுப்புனேன்
நிரஞ்சனா :ஓ அப்டியா சரி. ஏங்க நாளைக்கு நீங்க என்ன மகிஷாவ பாக்க கூட்டிட்டு போறீங்களா அவங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லணும் அவங்க இல்லைன்னா என்னால நினைச்சு கூட பாக்க முடியல
ஜெய் :சரி கூட்டிட்டு போறேன் இப்போ லேட் ஆகுது நீ தூங்கு நாளைக்கு நம்ம வீட்டுக்கு போலாம்
நிரஞ்சனா :ம்ம்ம் சரி
சீதாவும் ராமும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.
ஜானகி :ராம் சீதா நில்லுங்க. ஏன் இவ்ளோ நேரம்
சீதா :இல்ல அத்தை சாப்ட போனோம் அதான் லேட்
ஜானகி :ஒரு போன் பண்ணி இருக்கலாமே மா
சீதா :அது வந்து
ராம் நேராக ரூமிற்கு சென்று விட்டான்
ஜானகி :சீதா என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும் எதாவது சண்டையா
சீதா :அத்தை நான் நாளைக்கு எல்லாத்தையும் சொல்றேன் இப்போ ப்ளீஸ் என்னால எதுவும் சொல்ல முடியாது ப்ளீஸ் அத்தை நீங்க கவலை படற அளவுக்கு ஒண்ணும் இல்ல போய் தூங்குங்க
ஜானகி :நீ சொல்றேன்னு நானும் போறேன். பாத்துக்கோ எந்த கஷ்டத்தையும் மனசுல வசிக்காத
சீதா :சரி அத்தை
சீதா ரூமிற்குள் நுழைந்தாள் ராம் வானத்தில் நிலவினை வெறுமனே பார்த்துகொண்டிருந்தான்
YOU ARE READING
இணை பிரியாத நிலை பெறவே
Non-Fictionஅளவுக்கு அதிகமான கோபமும் அளவுக்கு அதிகமான அன்பும் தன்னோட திசையை எப்போ வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ளும் இதாங்க கதையோட கரு