9

12.5K 341 39
                                    

"இந்த லிஸ்ட்ல உள்ள திங்ஸ் லா வாங்கிட்டு வாடா".... என தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியவன் ஆதிராவை பார்க்க உள்ளே சென்றான்.

உள்ளே வந்தவன் காலரை இறுக்கிப் பிடித்தவள்

"எதுக்குடா இப்படி செஞ்ச.நீ பன்ன வேலைல என் அம்மா அப்பா கூட என்ன நம்பமாட்றாங்க .இப்போ சந்தோஷமா."...என அந்த அறை அதிரும்படி கத்தியவள் முகத்தை மூடி அழத் தொடங்கினாள்.குனிந்து அழுது கொண்டிருந்தவள்  கண்ணில் சக்தி கட்டிய தாளி பட்டுவிட... அதை சுட்டிக் காட்டி

"இத யார கேட்டு என் கழுத்துல கட்டுன. சொல்லு யாரக் கேட்டு கட்டுன "...என்றவளின் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது.

அதற்கு என்ன பதிலளிப்பது என தடுமாறியவன் ...

"உன்னையும் என்னையும் சேத்து வச்சி "...என அதை சொல்ல திணறியவன் ..."அதான் எனக்கு வேற வழி தெரியல "...

"இத கட்டுனா மட்டும் அவங்க பேசுனது எல்லாம் இல்லாம போயிடுமா.எப்போ என் அப்பாவும் அம்மாவும் என்ன நம்பலையோ அப்பவே நான் செத்துப் போயிட்டேன் "...என்றவளை வேகமாகத் தடுத்தவன் ...

"ப்ளீஸ் அப்படியெல்லாம் சொல்லாத .கண்டிப்பா எல்லா சரியாகிடும் ப்ளீஸ்  என்ன நம்பு"...

அவனை முறைத்துப் பார்த்தவள் அங்கிருந்து வெளியேற முற்பட அவள் முன் வந்து நின்றவன்...

"எங்க போற "...என்றதும் ....

"நான் எங்க போனா உனக்கென்ன "...என சீரியவள் மீண்டும் வெளியேற முற்பட ...

"ப்ளீஸ் நான் சொல்றத ஒரு நிமிசம் கேளு.அந்த மதனால உனக்கு மறுபடியும் ஆபத்து வரலாம்.நீ இங்க இருக்கிறது தான் பாதுகாப்பு.கண்டிப்பா என்னால உனக்கு எந்த பாதிப்பும் வராது.என்ன நம்பு "...என்றதும் அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவளுக்கு அதில் எந்தவித தவறான எண்ணமும் இருப்பதாகத் தெரியவில்லை.அவன் கூறுவதும் சரியெனப் பட அமைதியாக சென்று பெட்டில் அமர்ந்தாள்.

பெருமூச்சொன்றை வெளியேற்றியவன் ஹாலில் வந்து அமர்ந்துக் கொண்டான்.

இதய திருடா Where stories live. Discover now