சக்தி தன்னை விரும்புகிறான் என தெரிந்த பின்பு அவனை முதன்முதலாக எதிர் கொள்ளப் போகிறாள்.இதயத்துடிப்பு நூறைத் தாண்டித் துடிக்க அவளது பார்வை அறை வாசலிலேயே நிலைத்திருந்தது.
அவளது எதிர்ப்பார்ப்பை பொய்யாக்காமல் சக்தி உள்ளே நுழைந்தான்.
களையிழந்த முகம், கருவளையம் போட்டக் கண்கள், இளைத்த தேகம் என சக்தி ஆளே மாறிப்போயிருந்தான்.இந்த ஒரு வாரத்தில் சக்தி இந்தளவிற்கு மாறுவான் என அவள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. அவளை வசீகரிக்கும் அந்த சினேகமான புன்னகை தற்போது அவனிடத்தில் இல்லை.இந்த நிலையில் சக்தியை பார்த்தவளுக்கு கண்கள் கலங்க இதயம் ரணமாய் வலித்தது.அவனை தன்னோடு அனைத்துக் கொள்ளவேண்டும் என்ற உணர்வை தற்காலிகமாக கட்டுப்படுத்திக் கொண்டாள்.
சாரி சக்தி என அவள் தன் வாய்க்குள்ளேயே முனங்க அது அவன் செவியைச் சென்றடைந்தாற் போல் அறையில் தன் கண்களை சுழலவிட்டான்.
சுதாரித்துக் கொண்டவள் இன்னும் சுவற்றோடு ஒட்டி நின்றுக் கொண்டாள்.
மெத்தையில் கிடந்த அவளது போட்டோவை எடுத்தவன் அவளை வருடியபடி ...
இப்பக் கூட நீ இங்க என் கூட இருக்கற மாதிரி தோனுது.என்றவன் முத்தம் ஒன்றை அவள் நெற்றியில் பதித்துவிட்டு போட்டோவை தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
சிரமப்பட்டு தன் உணர்வுகளை அடக்கியவள் இதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாதவளாய் ...அவன் பின் நின்று....
ம்ஹூம் என செருமினாள்.
திடுக்கிட்டுத் திரும்பியவன் வெகுவாக தன் கையிலிருந்த போட்டோவை மறைத்துக் கொண்டு..,.
ஆ...ஆதிரா.,.ந்..நீ எப்போ வந்த ...இங்க என்ன பன்ற,.. என்றவனிடம் ...
ஏன் நான் இங்க வரக் கூடாதா என்றவள் மிகவும் சிரமப்பட்டு அவன் மறைத்து வைத்திருந்த போட்டோவை அவனிடமிருந்துப் பிடிங்கினாள்.
என்ன இதெல்லாம். இதுக்கு என்ன அர்த்தம்.,.என்ற அவளது கேள்வியில் தடுமாறியவன்.,..
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்