45

11.1K 322 79
                                    

மறுநாள் அலுவலகம் சென்றவனுக்கு வந்துச் சேர்ந்த முதல் செய்தியே ரேஷ்மா வேலையை ராஜினாமா செய்துவிட்டுச் சென்றுவிட்டால் என்பதுதான்..
.
.
.
.
.
.
.
.
.
.

ஏர்ப்போட்டிற்கு வருணையும் மதியையும் வழி அனுப்புவதற்காக...ஜானகி,  ஆதிரா, சக்தி என அனைவரும் வந்திருந்தனர்.

டேய் இப்பவே அண்ணிக்கிட்ட உன் லவ்வ சொல்லிட்டு அப்படியே எங்க ஹனிமூன் ட்ரிப்போட ஜாயின் பன்னிக்கோங்கடா இரண்டு பேரும் என்ற வருணைத் தனியாக இழுத்து வந்தவன்,..

கொஞ்ச நேரம் வாய மூடிக்கிட்டு கம்முனு இரேன்டா. அவ காதுல எதுவும் விழுந்திரறப் போவுது.

விழுந்தா விழுகட்டும் அப்பயாவது நீ அவங்கள லவ் பன்றது  தெரியட்டும்.,.என்றவன் அண்ணி இவன் எனக் கத்த போனவனின் வாயைப் பொத்தினான்.,

நீ ஆணியே புடுங்க வேணா நானே சொல்லிக்குறேன்,,

நீ உன் லவ்வ சொல்றதுக்குள்ள எங்களுக்கு குழந்தையே பிறந்திரும் டா,.அதானால நானே சொல்லிறேன்

ஒன்னும் வேண்டா  அவ பர்த் டே அன்னக்கி  நானே சொல்லிக்கிறேன்.

பாப்போம் பாப்போம் .

போ போய் என்ஜாய் பன்ற வழியப் பாரு என வருணை மதியிடம் தள்ளிவிட்டான்.

ஆயிரம் தடவை அவர்களை கவனமாக இருக்கச் சொன்னவர் சந்தோஷத்தோடு அவர்களை வழி அனுப்பி வைத்தார் ஜானகி.

மறுநாள் வெள்ளி கிழமை என்பதால் சக்தியும் ஆதிராவும் அன்னை இல்லம் சென்று ரிஷியைப் பார்த்துவிட்டு வந்தனர்.

அதன் பின் வந்த நாளில் சக்தி ஏதோ வேலை இருப்பதாகக் கூறி இரவுப் பத்து மணிக்கே வீட்டை வந்தடைந்தான்.

.
.
.
.
நேரமானதால் அவசரஅவசரமாக பேகை எடுத்துக் கிளம்பிவளின் குறுக்கே வந்து நின்றவன்,..

இன்னக்கி நீ  ஹாஸ்பிட்டல்  போக வேண்டாம்...

ஏன் சக்தி.,.

நாம கோவிலுக்குப் போகப்போறோம்.,

திடீரென சக்தி வழி மறைத்து அவளை கோவிலுக்குப் போறோம் என அழைக்கவும் முகமும் அகமும் மலர.,.

இதய திருடா Where stories live. Discover now