12

12.5K 344 25
                                    

மண்டபத்திற்குச் சென்றவுடன் சக்தி தன் நண்பர்களிடம் ஆதிராவை அறிமுகப்படுத்தினான். ஆதிரா
அவர்களுக்குப்   சிறு புன்னகையைப் பதிலாக தந்தாள்.

இருவரும் மணமக்களுக்கு பரிசளித்து விட்டு வாழ்த்துக்களைக் கூறி மேடையிலிருந்து கீழிறங்கும் வேளையில் சக்தி உடன் பணிபுரியும் பெண்கள் அவர்களை சூழ்ந்துக்கொண்டனர்.

"என்ன சக்தி எங்க கிட்டலாம் உங்க வைப்ப இன்ட்ரோ பன்னமாட்டிங்களா "...என அவர்களில் ஒருவள் கேட்க....

"சாரி நான் உங்கள யாரையும் கவனிக்கல... இவங்க ஆதிரா என்னோட வைப்,"...என்றான்.

அனைவரும் ஆதிராவிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

வருண் தொலைவில் நின்றபடி சக்திக்கு கை காட்ட.,.,

"ஒரு நிமிஷம் வருண் கூப்பிட்றான் .நான் என்னனு கேட்டுட்டு வந்தறேன் "...என பொதுவாக சொல்லிவிட்டு அங்கிருந்து விலகியவன் வருணிடம் சென்றான்.

"டேய் எதுக்குடா கூப்ட அங்க ஆதிரா மட்டும் தனியா இருக்கா.,, சீக்கிரம் சொல்லு"...என்றவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு...

"தனியா இருக்காங்களா. அங்கதான் அவ்ளோ பேர் இருக்காங்கல அப்றம் என்ன".,,.என்றான்.

"அவங்க யாரையும் அவளுக்குத் தெரியாது.  அதுவுமில்லாத லவ் மேரேஜினு நினைச்சி எதாவது கேட்டு வைக்கப் போறாங்க"...

"கூல் வை டென்சன். நான் தான் அவங்க எல்லாரையும் உங்க கிட்ட அனுப்பி வச்சேன்."...

"ஏன்டா".,..

"அவங்க இப்படியே யார் கூடையும் பேசாம இருந்தா எப்பதான் நார்மல் ஆவாங்க. அங்க பார் அவங்கல சுத்தி எவ்ளோ பேருனு. அதுவும் நம்ம ஆபிஸ்ல வொர்க் பன்றவங்க கம்மியாவா பேசுவாங்க. எல்லாரும் மாத்தி மாத்தி எதையாவது கேப்பாங்க அப்பையாச்சும் வாய திறந்துப் பேசட்டும். நீ வா "...என சக்தியை இழுத்துச் சென்றான்.
சக்தி தன் நண்பர்களுடன் இருந்தாலும் பார்வை ஆதிராவின் மேலேயே இருந்தது.

இதய திருடா Where stories live. Discover now