சக்திக்கு ஒரே குழப்பமாக இருந்தது.
புருவம் முடிச்சிட அந்த அட்ரஸையே பார்த்துக் கொண்டிருந்தவனிடம்...
பிரஷான்த் யாரு .,.என மதன் கேட்க
தெரியலடா.,.போன்ல பேசும் போது உன் வாய்ஸ்ல தான்டா பேசுனான்.ஒரே கன்பியூஷனா இருக்கு ,.,
போலிஸ்க்கு இன்பார்ம் பன்னிடலாமா என்ற மதனிடம் ...
இல்ல இல்ல வேண்டா இத நானே பார்த்துக்குறேன் என சக்தி எழ...மதன்
ஓகே டா ஆனா நானும் உன் கூட வரேன் என மதனும் கிளம்ப...
வேணாடா பரவால...நான் கிளம்புறேன்...என சக்தி நகர மதன்,,.
சக்தி ஒரு நிமிசம்.,.நீ ஆதிராவ லவ் பன்றியா என கேட்கவும்,..
மெல்லிய புன்னகையுடன் ஆமாம் என்றவன் அடித்ததற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான்.
வருண் நாளை தேனிலவுக்காக சிம்லா செல்லவிருப்பதால் இன்னும் ஒரு வாரம் விடுப்பு எடுத்திருந்தான்.
இதைப் பற்றி அவனிடம் கூறி வீணாக வருணையும் டென்ஷனாக்க வேண்டாமென சொல்லாமல் விட்டுவிட்டான்.
பிரஷான்த்தின் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த சில நொடிகள் காத்திருப்பிற்குப் பின் ஒருவன் கதவைத் திறந்தான்.
யாரு நீங்க..
இங்க பிரஷான்த்னு.,என சக்தி இழுக்க,.
நான் தான்.,நீங்க யா,,என அவன் சொல்லி முடிக்கும் முன்
சக்தி அவன் மூக்கைக் குறி வைத்துக் குத்த இரத்தம் பொலபொலவெனக் கொட்டியது.தன் மூக்கின் மேல் கை வைத்துக் கொண்டவன் .,
யாருடா நீ எதுக்குடா என்ன அடிக்கிற என்றிட ..
அவனது காலரை இருக்கிப் பிடித்த சக்தி.,
எதுக்குடா ஆதிராக்கு கால் பன்னி மிரட்டுன ..என்றதும் வேர்த்து விருவிருத்துப் போனது அவனுக்கு. ...
அப்படி யாரையும் எனக்குத் தெரியாது ...என்றவனின் கழுத்தைப் பிடித்து இறுக்கியவன்.,..
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்