சக்தி ஏதோ நினைத்தவனாய்
திரும்ப ஆதிரா அவனை வாடிய முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.இத்தனை நேரம் மலர்ந்த முகத்துடன் இருந்தவள் தற்போடு வாடியதை கண்டு.
மறுபடியும் என்ன ஆச்சு ஆதிரா இன்னும் என் மேல நம்பிக்கை வரலையா,.,.
சக்தியின் முகமும் வாடி தான் போனது.
அப்படி இல்ல சக்தி .,எனக்கு உன் மேல நம்பபிக்க இருக்கு ..,நீ கண்டிப்பா சொன்னத செய்வனு தெரியும் .,
அவளது பதில் அவனுக்கு நிம்மதியைத் தந்தாலும் அவள் முக வாட்டத்திற்கு என்ன காரணம் என குழம்பிப் போனான்.
அப்றம் ஏன் ஒரு மாதிரி இருக்க.,.என்று கேட்டேவிட்டான்.
ஹான்.,,அது உன்ன.,.,.என ஆரம்பித்தவள் அதற்கு மேல் எதுவும் சொல்லாமல் நிறுத்தி விட்டால்.
சக்தி கேட்டவுடன் ஒரு வேகத்தில் உன்ன விட்டுட்டு நான் எப்படி போவேன் என சொல்ல வந்தவள் பாதியிலே நிறுத்திவிட்டாள் .சொன்னால் தன்னை தவறாக எடுத்துக் கொள்வானோ என நினைத்து.
அவன் அடுத்தக் கேள்வி கேட்பதற்குமுன் பேச்சை மாற்றுவதற்கென
எனக்கு பசிக்குது நாம வீட்டுக்கு போலாமா.
பசி என்று சொன்னவுடன் பதறியவன்.
சாரி ஆதிரா நான் மறந்தே போயிட்டேன் வா கிளம்பலாம் என்றவன் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் பைக்கை கிளப்பி ஒரு ஹோட்டலின் முன் நிறுத்தினான்.
இப்பவே டைம் ஆச்சு. இனி வீட்டுக்குப் போய் எப்போ சமச்சி எப்ப சாப்பட்றது.வா இங்கயே சாப்டுட்டு போலாம் என அழைத்துச் சென்றான்.
இருவரும் தங்களுக்குத் தேவையானவற்றை ஆர்டர் செய்துவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க சக்தியின் போன் சினுங்கியது.
வருண் தான் அழைத்திருந்தான்.
போனை எடுத்தவுடன் சக்தியை பேச விடாமல்.
மச்சி எனக்கு எப்படா டிரீட்டு என்றான் எடுத்த எடுப்பிலே,.,.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்