14

11.9K 325 35
                                    

அடுத்த இரண்டு மணி நேரத்தில் இருவரும் வருணின் வீட்டை அடைந்தனர்.

"அப்படியே இங்கயே நில்லுங்க. இதோ வந்தரேன்".... என ஜானகி வீட்டினுள் செல்ல....

சக்தி "என்ன"... என்பது போல் வருணிடம் சைகை செய்ய...அவனோ...

"தெரியலடா"... என உதடைப் பிதுக்கினான்.

ஆரத்தி தட்டுடன் அவர் நுழைவாயிலிற்கு வர அதைக் கண்ட சக்தியின் மனதில் ஒரு வித பயம் தொற்றிக் கொண்டது ஆதிரா இதையெல்லாம் பிடிக்காமல் வருந்துவாளோ என.

"சக்தி வருணிடம் இதெல்லாம் வேண்டானு சொல்லுடா "...என சைகை செய்ய அவனோ...

"அம்மா என்ன பன்ற. இதெல்லாம் டூமச்சா இல்ல அவங்களுக்கு கல்யாணம் ஆகி நான்கு மாதம் ஆகுது. இப்போ போய் ஆரத்தி அது இதுனு"...என்க

"அவங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆனாலும் இப்பதான் இங்க வராங்க. அதனால ஆரத்தி எடுக்றதுல தப்பில்ல. நீ உன் வேலைய பாருடா"... என வருணை அடக்கினார்.

வருண் பாவமாக சக்தியைப் பார்த்தான்.

ஆரத்தி எடுத்து முடித்தவர் இருவரின் நெற்றியிலும் குங்குமமிட்டு

"ரெண்டு பேரும் வலது கால எடுத்து வச்சு உள்ள வாங்க. சக்தி அப்படியே என் மருமகள் கைய புடிச்சு உள்ள கூட்டிட்டு வா"... என கூறவும் சக்தி சற்று தயங்கியபடி ஆதிராவின் கைப்பற்றி உள்ளே அழைத்துச் சென்றான்.

அன்று ஆறுதலிற்காக ஆதிராவின் கைபற்றி வீட்டிற்கு அழைத்து வந்தான் .ஆனால் இன்று அவளின் கைபற்ற அவனுக்கு தயக்கமாக இருந்தது எதாவது தவறாக எடுத்துக்கொள்வாளோ என்று

வீட்டினுள் நுழைந்தவர்களை நேராக பூஜை அறைக்கு அழைத்துச் சென்றார் ஜானகி.

ஆதிராவை விளக்கேற்றச் சொல்ல அதை மறுக்காமல் செய்தாள். பின் அனைவரும் கண் மூடி பிரார்த்திக்க வழக்கம் போல் கலங்கிய கண்களுடன் கடவுளிடம் தன் பிரார்த்தனையை வைத்தாள்.நெற்றியில் திருநீறு வைத்தவரிடம் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொண்டனர்.

இதய திருடா Where stories live. Discover now