ஆதிரா கோபமாக உள்ளே நுழையவும் சக்தி பதறிப் போனான் எங்கே அவள் இவ்வளவு நேரம் தான் பாரதியுடன் பேசியதைக் கேட்டிருப்பாளோ என.
அவளது வாழ்வில் அவன் ஏற்படுத்தியத் துன்பங்களை சரி செய்தப் பிறகே தன் காதலை அவளிடம் கூறலாம் என்றிருந்தான். அதுவுமில்லாமல் இப்பொழுது அவளிடம் தன் விருப்பத்தை கூறினால் தன்னை கீழ்தரமாக எண்ணி பிரிந்துவிடுவாளோ என்ற பயம் வேறு.
இதயத் துடிப்பு எகிற சக்தி நின்றிருக்க பாரதியோ எவ்விதக் கலக்கமுமின்றி ஆதிராவின் கோபத்திற்குக் காரணம் அறிந்தவள் போல் நின்றிருந்தாள்.
ஆதிரா வந்த வேகத்தில் கையில் உள்ள பேகை பாரதியிடம் காட்டி
என்னடி இதெல்லாம்.,.
கைகளை குறுக்கே கட்டிக் கொண்டு ஆதிராவை மேலும் கீழும் பார்த்தவள்.
பார்த்தா ஜீவல்ஸ் பேக் மாதிரி தெரியுது என்றாள் இரு புருவங்களை உயர்த்தியபடி.
அய்யோடா அது எங்களுக்குத் தெரியாதா. இது எதுக்கு எனக்குனு கேட்டேன்.
அத யார் குடுத்தாங்ளோ அவங்ககிட்டையே போய் கேளு.
அப்படியே நடிக்காத. நீ தான இத அம்மாக்கிட்ட குடுத்து எங்கிட்ட குடுக்கச் சொன்ன.
இது பாரதியின் வேலை தான் அவள் கொடுத்தாள் சட்டம் பேசி வாங்க மறுத்துவிடுவாள் என்று தான் தன் அன்னையின் உதவியை நாடினாள்.
இவ்வாறு தோழிகள் இருவரின் உரையாடல் நீண்டுக் கொண்டேப் போக சக்தியின் நிலைத் தான் பெரும் பாடாக இருந்தது.தலையும் புரியாமல் வாலும் புரியாமல் பேந்த பேந்த முழித்துக் கொண்டிருந்தான்.
வந்தவள் தன்னிடம் பாயாமல் பாரதியிடம் பாய்வதிலே புரிந்துக் கொண்டான் இவர்களின் உரையாடலை அவள் அறியவில்லை என்று.
அதன் பின் பாரதி ரேஷ்மாவைப் பற்றி சக்தியிடம் கேட்பதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.
மண்டபத்திலும் பாரதியுடன் ஆதிரா தங்கிக் கொள்ள சக்தி சதீஷீடன் தங்கிக் கொண்டான்.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்