மூன்றரை மணியளவில் சக்தியும் ஆதிராவும் மதுரையிலிருந்து சென்னைப் புறப்படும் பேருந்தில் ஏறினார்.
ஆதிரா ஜன்னலோர இருக்கையில் அமர சக்தி அவளருகில் அமர்ந்துக் கொண்டான்.
ஏர்ப்போட்டிலிருந்து நேராக பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர்.
ஜன்னலின் புறம் திரும்பியவளின் கண்ணில் மலமலவென கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.
தன் தோழியின் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் தாக்குப்பிடித்தவள் இப்பொழுது அழத் தொடங்கினாள்.
ஏர்ப்போட்டிலிருந்து இங்கு வரும் வரை ஆதிராவின் மௌனம் சக்தியிடம் அவளது மன வேதனையை உணர்த்த.
அங்க அவ்ளோ ஆறுதலா பேசிட்டு இங்க வந்து அழுதா என்ன அர்த்தம். நீயும் தான சொன்ன ஜஸ்ட் சிக்ஸ் மன்த் தான்னு.சீக்கிரம் போய்டும் என சக்தி ஆறுதலாக பேச முயன்றான்.
இல்ல சக்தி அப்பவே என்னால கன்ட்ரோல் பன்ன முடியல எங்க நானும் அழுதா அவ உடைஞ்சு போயிருவாளோனு தான் கொஞ்சம் தைரியமா இருந்தேன்.ஆனா இப்ப என்னால சுத்தமா முடியல என மீண்டும் தன் அழுகையைத் தொடர்ந்தாள்.
சக்தியும் அவள் மனம் விட்டு அழட்டும் என விட்டுவிட்டான்.
சிறிது நேரத்திற்கு அழுது ஓய்ந்தவள் சக்தியிடம்
நானும் அவளும் லெவன்த் டுவல்த்லருந்து காலேஜ் முடிக்கிற வரையிலும் ஒன்னாதா இருப்போம்.எப்போதும் என்கூட இருக்கிறவ இப்ப ஆறு மாசத்துக்கு தான் என்னவிட்டுப் போறா.ஆனா அது என்னவோ எனக்கு ரொம்ப நாள் பிரிஞ்சிருக்கிற மாதிரி தோனுது சக்தி என்றவள் மீண்டும் ஜன்னலின் புறம் தன் தலையைத் திருப்பிக் கொண்டாள்.
இரண்டு நாட்கள் திருமண வேலை மற்றும் அழுதக் கலைப்பில் ஆழ்ந்து உறங்கியவள் உறக்கத்தில் சக்தியின் தோளின் மேல் சாய்ந்துக் கொண்டாள்.
அதுவரை பக்கத்துச் சீட்டிலிருந்த குழந்தையை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் தன் தோள் மேல் சாய்வதை உணர்ந்தான்.
CZYTASZ
இதய திருடா
Romansஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்