மதனின் நிபந்தனையை கேட்டவள் அப்படியே அசையாது அமர்ந்திருந்தாள்.அவளது மனதை சக்தியிடம் வெளிப்படுத்தும் முன்பே அவனை விட்டுப் பிரியக் கூடும் என அவள் எதிர்ப்பார்க்கவில்லை.
சுவரில் தலைசாய்த்தபடி அமர்ந்தவள் வெடித்து அழத் தொடங்கினாள்...
ஐ லவ் யூ சக்தி .எனக்கு உன் கூட வாழ குடுத்து வைக்கல ...நான் சீக்கிரம் உன்னவிட்டுப் போயிருவேன்...நீ இல்லாம என்னால இருக்க முடியுமானு தெரியல ... ஆனா தூரத்திலருந்து உன்ன பார்த்துக்கிட்டே உன்னோட நினைவுகளோட வாழ்ந்தரேன் சக்தி.,உன்ன காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல,.. என்றவள் தன்னாள் முடிந்தவரை அழுது தீர்த்தாள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் சக்தி வீடு வந்து சேரவில்லை.
கதவையே வெறித்தபடி அமர்ந்திருந்தவள் போனை எடுத்து மீண்டும் முயற்சிக்க சுவிட்ச்டு ஆஃப் என வந்தது.
ஒரு வேளை மதன் கோவத்தில் சக்தியை எதுவும் செய்து விட்டானோ என பதறியவள் இம்முறை மதனுக்கே கால் செய்தாள்.ஆனால் நாட் ரீச்சபுள் என வந்தது.
இதயம் வெடித்துவிடுவது போல் இருந்தது.
கடவுளே ஏன் என்ன இப்படி சோதிக்கிற. நான் என்ன பாவம் பன்னேன். முதல்ல என்னொட அப்பா அம்மாவ எங்கிட்டருந்து பிரிச்ச இப்ப என் சக்திய .,ஏன் இப்படிலாம் நடக்குது...என பூஜை அறையில் சாமி படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தபடி கதறியவளின் காதில் அழைப்பு மணி ஓசை கேட்க...
சக்தியாகத் தான் இருக்கும் என
விழுந்தடித்து எழுந்து ஓடியவள்
கதவை திறக்க...அவளது நம்பிக்கையை வீணாக்காமல் சக்தியே அவள் எதிரில் நின்றிருந்தான்.எப்பொழுதும் அவன் உதிர்க்கும் அந்த சினேகமான புன்னகையுடன் அவன் ஏதோ சொல்ல வர .,ஆதிராவோ சக்தி என்ற கேவலுடன் அவனை இறுகி அனைத்துக் கொண்டாள்.
தன் கண்ணீரால் சக்தியின் சட்டையை நனைத்தபடியே தேம்பி தேம்பி அழுதவள் ...
சக்தி உனக்கு எதுவும் ஆகலல. அவன் உன்ன எதுவும் பன்னிரலல என்பதையே மீண்டும் மீண்டும் உச்சரித்தவள் அவன் நெஞ்சில் ஆழமாக முகம் புதைத்தபடி தேம்பிக்கொண்டிருக்க சக்திக்கோ ஒன்றும் புரியவில்லை.
YOU ARE READING
இதய திருடா
Romanceஎதிர்பாரா சூழலில் கதாநாயகியின் மணாளனாகும் ஒருவன் அவளின் இதய திருடனாக மாறப் போகிறான். நான் எழுதும் முதல் கதை இது. படித்து பார்த்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்