50.Epilogue

13.6K 420 132
                                    

இரண்டு வருடங்களிற்குப் பிறகு......

சக்தி எழுந்திரி.,.டைம் ஆகுது பாரு.,.

ம்ம்ம் என முனங்கியபடியே ஆதிராவை  தன் மீதே இழுத்து சரித்தவன் அவளை இறுக்கி அனைத்தபடி.,.,

அதுக்குள்ளவா,...இன்னும் கொஞ்ச நேரம் ப்ளீஸ் ....என அவளை இன்னும் இறுக்கிக் கொண்டான்.

என்னடா பன்ற பக்கத்துல ஸ்ரீ தூங்குறா அவ மேல எதுவும் விழுந்துறப் போறேன்.என எழ முற்பட்டவளிடம்.,,

அதலாம் விழ மாட்ட ...கொஞ்ச நேரம் அமைதியா இரு எனக்கு தூக்கம் வருது,,.என்றவனின்  கன்னத்தைக் கடித்து வைத்தாள்,...

செல்விஸ்ரீ இவர்களது ஒன்றரை வயது குழந்தை.செல்வியின் முகசாயலில் இருந்தமையால் செல்விஸ்ரீ என பெயரிட்டனர்.

தூங்க போறியா.,உன்ன ,..இன்னக்கி நிஷாவோட மேரேஜ் .,நாம மண்டபத்துல இருக்கோம் அத மறந்துட்டியா..

ஆ ...ஆ,..என அலறியடித்து எழுந்தவன் எதுக்குடி இப்படி என்ன கடிச்ச..

அப்படி தான் கடிப்பேன். நீ முதல்ல குளிச்சிட்டு கிளம்பு. நான் அதுக்குள்ள ஸ்ரீய ரெடி பன்னி வக்கிரேன்.அப்றம் நான் கிளம்பனும்..டைம் இல்ல,..

மணி 5 தான ஆகுது அதுக்குள்ள கிளம்பனுமா என சலித்துக் கொண்டவனிடம்,.,

ஏழரைக்கு முகூர்த்தம் அது வரைக்கும் நான் நிஷா கூட இருக்கனும்.இன்னக்கி புல்லா ஸ்ரீய நீதான் பார்த்துக்கனும் .அதான் இவ்ளோ சீக்கிரம் கிளம்பச் சொல்றேன்.

என்ன அப்போ நீ என்கூட இருக்க மாட்டியா அப்ப நானும் ஸ்ரீகுட்டி மட்டும் தான் இருக்கனுமா இது என்ன நியாயம் என்றவனிடம்,..

வருஷம் புல்லா உன்கூட தான இருக்கேன் இன்னக்கி ஒரு நாள்ள ஒன்னும் ஆகிடாது.நீ பாப்பாவ பத்திரமா பார்த்துக்கோ.அப்றம் என் பின்னாடியே சுத்தாம போய் மதன் கூட கொஞ்ச நேரம் இரு என்றவள் சக்தியை குளியலறையினுள் தள்ளிவிட்டாள்.

முனங்கிக் கொண்டே கதவை தாழிட்டவன் மீண்டும் திறந்தபடி.,.

ஆதி ஒரு ஹெல்ப்.,..

இதய திருடா Where stories live. Discover now