19

11.2K 296 32
                                    

அப்படியே உறைந்தபடி நின்றிருந்தவள் மனதில்

"இவன் என்ன அவமானப்படுத்தி என்னோட அப்பா அம்மாட்டருந்து என்ன பிரிச்சி என்னோட வாழ்க்கைய திசை திருப்பினவன் ,...இவ ,.இவன சும்மா விடமாட்டேன் "...என நினைத்துக்கொண்டிருக்க கண்கள கோபத்தில் சிவந்து உடல் முழுவதும் சூடேற வியர்க்கத் தொடங்கியது.

அதை கலைக்கும் விதமாக நிஷா அவளைப் போட்டு உலுக்கினாள்.

"ஓய் ஆதிரா என்ன ஆச்ச அப்படியே உறைஞ்சி போய் நின்னுட்ட"...என்க...

"ஹாங் ஒ.,ஒன்னுல்ல ஏதோ யோசனைல இருந்துட்டேன் "...என அவளிடம் பேசியபடி மதனைப் பார்க்க அங்கு அவன் மறைந்திருந்தான்.

"மேரேஜ்ல எனக்கு சுத்தமா இன்ரஸ்ட் இல்ல .ஆனா இவர பார்த்துப் பேசனப்றம் புடிச்சுப் போச்சி"... என கண்கள் மிளிற நிஷா கூற ஆதிரா நிஷாவை பாவமாகப் பார்த்தாள்.

"மனசுல நிறைய ஆசைய வளத்துவச்சிருக்கா என்னனு சொல்லிப் புரிய வைக்க பக்குவமாதான் எடுத்துச் சொல்லனும் "...என மனதில் நினைத்துக்கொண்டாள்.

"அன்னக்கி என்ட இருந்து நீ தப்பிச்சிட்ட இன்னக்கி மாட்டிக்கிட்ட உன்னோட லவ் ஸ்டோரிப் பத்தி சொல்லு"...என்றதும் ...

"ஹாங் ..,.. கண்டிப்பா சொல்றேன் அது ஒரு பெரியக் கதை. உன்னோட போன் நம்பர் "...என ஆதிரா சொல்லிமுடிக்கும் முன்பே நிஷாவின் மொபைல் ரிங்கானது.

"ஒரு நிமிஷம் அவர் தான் கால் பன்றாரு"... என போனைக் காதில் வைத்தவள்.

"ஹலோ மதன் நான் இங்க தான் இருக்கேன். ஒரு டூ மினிட்ஸ் வந்துட்டேன்."...என போனை வைத்தவள்.

"சாரி ஆதிரா அவருக்கு டைம் ஆச்சு கிளம்பலாம்னு சொல்றாரு. நம்ம இன்னொரு நாள் மீட் பன்னும் போது உன் லவ் ஸ்டோரி சொல்லு பாய் "...என ஆதிராவை பேசவிடாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
.
.
.

"அட்டன்டரிடம் எதையோ விவரித்தபடி நின்றிருந்தவளை "ஆதிராசக்திவேல் "...என யாரோ அழைக்கத் திரும்பினாள்.

அவள் எதிரில் நின்றுக்கொண்டிருந்தவனைப் பார்க்க அவளுக்கு அப்படியே பற்றிக்கொண்டு வந்தது.

இதய திருடா Where stories live. Discover now