புன்னகை 22ஜீவா, இனி, யாழி, மீனாட்சி, சூர்யா, வெற்றி, காயத்ரி என கிளம்பியவர்கள் போகும் வழியில் பரிதியையும்இழுத்துக்கொண்டு சென்றனர்
வண்டியை விட்டு இரங்கியதில் இருந்து இதழிநியின் கையை விடாமல் பிடித்திருந்தான் ஜீவா.
இதழிநி - எதுக்கு மாமா இப்படி திருவிழா கூட்டத்துல குழந்தைங்க கையை புடிச்சிட்டு நடக்குற மாதிரி என்கையை புடிச்சிட்டு இருக்க அங்க பாரு எல்லாரும் ராட்டினம் சுத்த போறாங்க வா நம்மலும் போலாம் என்றுஅவன் கையிலிருந்து தன் கையினை உருவிக்கொண்டு ஓட ஜீவாவும் அவள் பின்னால் ஓட சட்டென்றுஅவர்களை நோக்கி ஒரு வாகனம் வந்துகொண்டிருந்தது
இதழ்ஓடிக்கொண்டிருக்கஅவள்மீதுகவனம்பதித்தஜீவாமற்றவற்றின்மீதுகவனம்செலுத்தவில்லை. ஆனால்அவளவன்மீதுகவனம்பதித்திருந்தமீனாட்சிவண்டிஅவனைநோக்கிவருவதைகண்டுக்கொள்ளஜீவாவைகாப்பாற்றவேண்டிஅவனிடம்ஓடியவள்அவனைவேகமாகஇழுத்துதள்ளிவிடநூலிழையில்தப்பியமீனாட்சிநிலைதடுமாறிகீழேவிழகைகளிலும்தலையிலும்அடிபட்டுமயங்கிவிழுந்தாள்
கண்ணிமைக்கும் நேரத்தில் இவை அனைத்தும் நடந்துவிட ஒரு நொடி என்ன செய்வது என்று தெரியாமல்அனைவரும் திணறி நின்று மறு நொடி ஜீவா ஓடிச்சென்று மீனாட்சியை தூக்க அதற்குள் பரிதி கார் எடுத்து வரசென்றான். ஜீவா கண்ணசைக்க வெற்றி வேகமாக வந்த காரினை துரத்தி சென்றான்.
சூர்யா தனது அக்காவின் நிலையை எண்ணி அழுக இனி அவனை சமாதானம் செய்துக்கொண்டு இருந்தாள். கார் வந்ததும் மீனாட்சியை எடுத்துக்கொண்டு வெற்றியை தவிர அனைவரும் மருத்துவமனை சென்றனர்
மருத்துவர் மீனாட்சியை சோதித்துக்கொண்டிருக்க இனி அவளுடன் உள்ளே இருந்தாள். ஜீவா, சூர்யா, யாழி, பரிதி மற்றும் காயத்ரி வெளியில் காத்திருக்க சூர்யா அழுது அழுது ஓய்ந்திருந்தான்
ஜீவா - டேய் குட்டி பையா அக்காவுக்கு ஒண்ணுமில்ல டா டாக்டர் செக் பண்ணிட்டு ஊசி போட்டுஅனுப்பிருவாங்க என்று சமாளித்தான்