அத்தியாயம் - 04

455 22 0
                                    


            "சாணக்கியன் 💝 அக்னி"

அழகாக மேடை அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்டமாக காட்சியளித்தது. வெகுவிமர்சையாக எல்லா ஏற்பாடும் நடந்தது, சாணக்கியன் மற்றும் அக்னியின் ரிசப்ஷன்.

அதை எல்லாம் பார்த்தபடி இருந்த ஜானுவின் மனமோ,
1: 'கல்யாணம் சிம்பிளா நடந்தாலும், ரிசப்ஷன் செம்மயா இருக்கு. ஆனா அக்னி நம்மகிட்ட அவ்வளவா பேசமாட்டிக்கிறாங்க... நம்மள பிடிக்கலைன்னா, இவ்வளவு பாத்து பாத்து எல்லாத்தையும் செய்யமாட்டாங்க. ஆனாலும் ஏதோ மனசு உறுத்தலாவே இருக்கு! நம்மள பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா இல்ல கட்டாயபடுத்திருப்பாங்களா?', குழப்பமாக கேள்வி வந்தது.

2: 'எது கட்டாயப்படுத்தியா? அதுவும் அவங்கள? அவங்கள கண்ட்ரோல் பண்ற சக்தி இங்க எவனுக்கும் இல்ல', தெனவெட்டாக கூறியது.

1: 'அப்புறம் அவங்க என்கூட நார்மலா பேசமாட்டிக்கிறாங்க?', மீண்டும் குழப்பியது.

2: 'அவங்க எவ்வளவு பெரிய ஆளுடா! ரொம்ப பிரபலமானவங்க. இந்த மாதிரி இருக்குறவங்க மோஸ்ட்லி எக்ஸ்பிரசிவா இருக்கமாட்டாங்க.', சமாதானம் கூறியது.

'அப்டியும் இருக்கலாம்!', ஜானு தனக்கு சொல்லிக்கொண்டு அருகிலிருந்த அக்னியை கண்டான்.

விருந்தினர்கள் வந்து வாழத்திக்கொண்டிருக்க, அதில் பெரும்பாலும் பிரபலங்களே இருந்தனர். ஜானுவிற்கு தெரிந்தவரை... அக்னிக்கென்று சொந்தம் யாருமில்லை என்பதே! இதுவும் அனோகி மூலமாக தெரிந்துக்கொண்டான்.

     ஆனால் இன்று பிரபலங்கள் அவளுடன் இயல்பாக பேசியது, அவனுக்கு பெரும் வியப்பும், அத்தோடு... அவன் தொலைக்காட்சியில் மட்டுமே கண்ட பிரபலங்கள் எல்லாரும் நேரில் கண்டதும் அதிசயித்துப்போக, விநாயகம் சித்தப்பாவிற்கு பெருமை தாளவில்லை. விஷ்ணு மற்றும் ஊர்வசி, அவர்களது ஜோடி பொருத்தத்தை கண்டு மகிழ்ந்தனர். அனோகி அக்னியை மனநிறைவுடன் பார்த்தாள்.

விழா இனிதே முடிந்தது!

சுற்றமும் நட்பும் கிளம்பியிருந்தனர், ஆகாஷ் மணமக்களுக்கு வாழ்த்திவிட்டு அவனும் கிளம்பிவிட்டான்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now