தரையில் மயங்கி விழுந்த சாணக்கியனை திகைப்போடு நோக்கியவள், அவனை தட்டி எழுப்ப முனைய, அவனிடம் அசைவே இல்லை. அதே நேரம் அக்னியை சந்திக்க வந்த அனோகி, அவளை தேடி வர, அக்னியின் பதட்டமான குரலில் இவள் என்னவோ என பதறிப்போய் அறை உள்ளே நுழைந்தவள் இக்காட்சியை கண்டாள்.
இருவருமாக அவனை தூக்கி படுக்கையில் கிடத்திட, அனோகி தனக்கு தெரிந்த மருத்துவரை அழைத்து விவரம் கூறி வர சொல்ல, அவர் பரிசோதித்து, உயர் ரத்த அழுத்தம் என்று கூறி, சில சத்த மருந்துகளும், முதலுதவியும் செய்துவிட்டு புறப்பட்டு சென்றதும், அனோகி அக்னியை கண்டாள்.
"என்னாச்சு இவருக்கு? திடீர்னு ஏன் மயங்கிட்டாரு?", என்றாள். அக்னி நடந்தவற்றை கூற, "பாவம் இவரும் எவ்ளோ தான் தங்குவாரு!", என அப்பாவியாக நக்கல் குரலில் கூறினாலும் சோகம் இருந்தது.
"என்ன நக்கலா?", அக்னி முறைக்க, "ஐய்யோடா! ரொம்பத்தான்.", என முகத்தை சுழித்த அனோகி, சோபாவில் அமர்ந்துவிட, அக்னியும் அவளருகே சென்றமர்ந்தாள்.
இருவரும் அவன் விழிப்பதற்காக காத்திருக்க, அரைமணிநேரம் கடந்து கண்விழித்தான் சாணக்கியன். தலை பாரமாக, வின்னென்று வலித்தது. அவன் எழவும், அக்னி அவனை நோக்கி வேகமாக வந்து அவன் முன் நிற்க, அவள் நிற்பது தெரிந்தும் அவளை காண்பதை தவிர்த்தான்.
அனோகியும் வர, சாணக்கியன் அவளது கைப்பிடித்து, கண்களாலே எதையோ கேட்க, அவள் தலையசைக்கவும் அவன் நொறுங்கிவிட்டான்.
"நீயும் மறைச்சிட்டல?", என்றான் கலங்கிய விழியோடு.
"அப்போ சரினு தோணுச்சு. நீங்க உங்க காதல மறந்திடுவீங்கன்னு நினைச்சேன். ஆனா இத்தன வருஷம் கடந்தும் எதுவுமே மறக்காம இருக்கீங்க. இப்டிலாம் நடக்கும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, உங்க காதல சேர்த்திருப்பேனே!", என்றாள் விரக்தியாக.
அக்னி இருவர் பேசுவதையும் குழப்பமாக கண்டாள்.
"ஹே அனு! என்ன காதல் கீதல்னு என்னென்னமோ பேசுறீங்க?", என இடைப்புகுந்தாள்.
YOU ARE READING
[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼
Short Storyநான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!