அவள், "அக்னி!"
அவன், "அக்னிமித்ரன்!"
இருவரும் ஒரே நேரத்தில் தங்களது பெயரை கூறினர்.
அதை கேட்டு மூவரும் அதிர்ந்துப்போய் கத்தினர், "வாட்?".
முதலில் சுதாரித்தது நம் அகி எனும் அக்னிமித்ரன் தான். அவன் ஆச்சரியமாக சிரித்தான்.
"பாத்தியா அகிகுட்டி. என் வாழ்க்கையில மட்டுமில்ல, பேர்ல கூட நீ சரிபாதி தான்!", என்றவனது காதல் மொழியில், அக்னியின் செல்கள் சிறகடித்தது, அவனை ரசிக்காமல் இருக்கமுடியவில்லை. ஆனபோதும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
"உண்மையாவே அக்னிமித்ரன் தானா?", அனந்த் கேட்டான் நம்பாமல்.
"சந்தேகம் பிடிச்சவனே! உண்மையாதான்டா. வேணும்னா என்னோட சர்டிபிகேட் காட்டட்டா?", என்று முறைப்பவனிடம் வேண்டாம் என்று தலையசைத்தான்.
"ஏன் மேடம்! இந்த நாலு அடி ஸ்பீக்கர் தான் பேசுமா? இந்த நாப்பதஞ்சு கிலோ டால் பேசாதா?", என்று அனந்தை பார்த்து நக்கலாக கூறியவன், அவளை பார்த்து புன்னகைத்தான்.
"தேவையில்லாம என் தம்பிய கிண்டல் பண்ணாத! எங்கள பாத்தா, உனக்கு சமைச்சு கொட்டவும், கத பேசவும் வந்த மாதிரி இருக்கா? எதுக்கு வர சொன்னியோ அது சொல்லு?", என்றாள் சிடுசிடுப்புடன்.
"சரி! விஷயத்துக்கு வரேன்.", என்றவன் ஒருநொடி அனந்த்தை பார்த்து, "நீ கொஞ்சம் எங்கள தனியா விடுறியாடா?", என்றான்.
"அவனுக்கு எல்லாம் தெரியும். நீ சொல்லு!", என்றாள் அக்னி.
"ரொம்ப நல்லது!", என்றவன், "என்ன கேட்ட, எனக்கு ஏற்கனவே காதலி இருக்கப்போ எனக்கு ஏன் லவ் ப்ரபோஸ் பண்றனு தான?, என்று அவளை கூர்ந்து பார்த்தபடி, "ஒருவேள அப்டி யாருமில்லைன்னு சொன்னா, நீ என்ன ஏத்துப்பியா?", என்றான்.
அக்னிமித்ரன் தீவிரமாக அவளோடு பேசுவதை பார்த்து, அனந்த் சங்கடமாக உணர்ந்தான். அவர்களுக்குள்ளான தனிப்பட்ட பேச்சில் இருக்க விரும்பாமல் எழுந்து வீட்டை சுற்றி பார்த்துவிட்டு வருகிறேன் என்று நழுவிக்கொண்டான்.
YOU ARE READING
[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼
Short Storyநான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!