அத்தியாயம் - 24

234 18 4
                                    


         போட்டியில் மட்டுமில்லாது தனது கனவினை நோக்கிய படியிலும் வெற்றி கிட்டிய மகிழ்வில் அக்னியின் நாட்கள் அழகாக கடந்தது. இதற்கிடையே அனந்த் தனது கிரிக்கெட் அணியோடு இணைந்து விளையாடிய போட்டியில் வெற்றி பெற்றிருந்தான். பிள்ளைகளின் வெற்றி களிப்பில் திக்கு முக்காடிப்போனார் அபிநந்தன்.

        அக்னியின் தேர்வு முடிவுகள் வெளிவந்தது, அவள் பள்ளியின் முதல் மதிப்பெண் பெற்று இருந்தாள். அதைக்கேட்ட மூவருக்குமே மகிழ்வோடு, பெருமையும் வந்தது. அதன் பின்னர் அக்னி தனது கல்லூரி வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைத்தாள். அக்னிமித்ரன் கல்லூரியிலே அவளும் இணைந்தாள், ஏற்கனவே அங்கே பரிச்சயமான அவளுக்கு, இயல்பாகவே கல்லூரி முழுதும் நட்பாகிவிட்டது.

         அக்னிமித்ரனும் கல்லூரி படிப்பை முடித்து, அப்பாவின் தொழிலை, பெரியப்பாவின் உதவியோடு நடந்த ஆரம்பித்திருந்தான்.

          ஆனால் இதில் மாறாத விஷயம் ஒன்று உண்டு! அது...
இருக்கா? இல்லையா, என்ற கேள்வியில் தொக்கி நிற்கும், அக்னி மற்றும் அக்னிமித்ரன் காதல் தான்!

           தனது நடன குழு வெற்றிப்பெற்ற நொடி வாழ்த்திவிட்டு, அவளை கண்களில் நிறைத்துக்கொண்டு நின்றிருந்தவனிடம் எதுவும் பேச தோன்றாதவளாக சென்றுவிட்டாள். அவனும் தடுக்கவில்லை. அதன் பின்னர் இருவரது வாழ்க்கையும் அத்தனை பிஸியாக மாறிவிட்டிருந்த காரணமும் அதில் ஒன்று.

          நாட்கள் கடக்க, அன்று மாலை கல்லூரி பேருந்திலிருந்து இறங்கி வீட்டை நோக்கி நடந்துக்கொண்டிருந்த அக்னியை உரசிக்கொண்டு வந்து நின்ற கார் ஒன்று, அவள் சுதாரிக்கும் முன்னே அவளை காருக்குள் இழுத்துப்போட்டது. அவள் சுதாரிக்கும் முன்னே, அவளது முகத்தில் எதையோ அடித்து மயங்கச்செய்தது முகமுடி ஒன்று. அவள் மயங்கவும், மூன்று முகமுடிகளும் சிரித்தது.

"என்னடா அஜய்? பாப்பா பொசுக்குனு மயங்கிப்போச்சு?", என்றான் ஒருவன்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now