ஒரு வாரம் கடந்திருக்க, சஞ்சய் ராம்குமார் முன்பு அமர்ந்திருந்தனர் அக்னி மற்றும் சாணக்கியன்.ஒரு சில பரஸ்பர சோதனைகளுக்கு பிறகு, எப்போது அறுவை சிகிச்சை, அது நல்ல பலன் தருவதற்கான சாத்தியம் என அனைத்தையுமே கூறினான் சஞ்சய்.
இருவருமாக அவனிடம் பேசிமுடித்து மருத்துவமனையிலிருந்து புறப்பட, ஏனோ சாணக்கியன் மனம் கலவையான உணர்ச்சிகளோடு இருந்தது.
அதே நேரம் அக்னியின் அலைப்பேசி ஒலி எழுப்பியது, எடுத்து பார்க்க சாணக்கியனின் தங்கை ஊர்வசி.
"ஹலோ அண்ணி!", உற்சாகமாக பேசினாள்.
"ஊர்வசி! சொல்லும்மா!", என மகிழ்வோடு பேசி, அக்னியும் நலன் விசாரிக்க, சாணக்கியன் தங்கை பெயரை கேட்டதும், யோசனையாக அமர்ந்திருந்தான்.
"அப்டியா? சரி ஓகே! நாங்களும் அங்க வரோம்.", என அழைப்பை முடித்தவள், திரும்பி அவனை பார்த்துவிட்டு, தங்களது இல்லத்திற்கு இல்லாமல், சாணக்கியன் வீட்டை நோக்கி வாகனத்தை செலுத்த, அவன் கேள்வியாக புருவம் சுருக்கினாலும், அமைதியாக இருந்துக்கொண்டான்.
சாணக்கியன் வீட்டின் முன்பு அக்னியின் கார் நின்றது. இருவருமாக உள்ளே வர விநாயகம் சித்தப்பா, ஊர்வசி, அவளது கணவன் விஷ்ணு மூவரும் இருந்தனர்.
"ஜானு!", என்றபடி ஓடி வந்து அவளை அணைத்துக்கொண்டாள்.
"ஹே பாத்தும்மா!", விஷ்ணு அவளை நிதானித்தான். சாணக்கியன் விழித்தான். ஊர்வசி அழைத்து 'இங்கு வாருங்கள்' என்று மட்டும் தான் சொல்லியிருந்தாள், விஷ்ணுவின் பேச்சை கேட்ட பிறகு, அக்னி எதையோ யூகித்தவளாக பூரித்துப்போய் நிற்கும் ஊர்வசியை கண்டாள். அவர்களது பாசத்தை நெகிழ்வுடன் கண்டிருந்தார் விநாயகம்.
ஊர்வசி தான் கருவுற்றிருக்கும் விஷயத்தை தெரிவிக்க தான், அவர்களது பெற்றோர் வாழ்ந்த இவ்வீட்டிற்கு வர சொன்னாள். இப்போது அதை தெரிவிக்கவும், சாணக்கியனது கண்களெல்லாம் கலங்கிப்போனது. அக்னி அவளை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.
YOU ARE READING
[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼
Short Storyநான் விரும்பிடாத இன்பம் நீ ... உனை விரும்பும் துன்பம் நான்...!