அத்தியாயம் - 21

243 18 4
                                    


[இனிய மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் மக்களே🙏🏻🌼.
கதை எப்டி போகுதுன்னு Commentsல  தெரிவிங்க. அது எனக்கு ஊக்குவிப்பாக இருக்கும்😇😊!!!]

தன் தந்தை அபிநந்தன் கூறியதை ஏற்றுக்கொண்டு, அந்த போட்டி பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தாள் அக்னி.

அக்னி ஒப்புக்கொண்டதும், அக்னிமித்ரனுக்கு அழைத்து, அக்னியே பயிற்சியாளராக வருகிறாள் என தெரிவித்தார்.

நமது அகிக்கு சொல்லவா வேண்டும்... அவனுக்கு உற்சாகமும், பரவசமும் ஒருசேர தொற்றிக்கொண்டது. உண்மையை கூறவேண்டுமென்றால், அபிநந்தனை சந்திப்பதற்கு தான் அகி வந்தான். அன்று ஏதோ விசேஷம் என பெரியம்மா ஜெயந்தி கோவிலுக்கு போக சொல்லவும் சென்றுவிட்டிருந்தான். அதன் பின்னர் அக்னி தானாக வந்து பேசியது, காதலை கூறியது எல்லாம் அவனுக்கு இன்பதிர்ச்சியே.

தன் வீட்டிலிருந்து எவ்வித பதிலும் கூறாமல், ஏன் முகத்தை கூட நிமிர்த்து பார்க்காமல், உணர்வுகளற்ற முகத்தோடு புறப்பட்டவள் எவ்வாறு இன்று தன் மீது இத்தனையாக காதல் வயப்பட்டாள் என்ற வியப்பும், அவள் தன்னை காதலிப்பதை நேரில் தான் கோவிலில் இருப்பதை சரியாக அறிந்து வந்தது என மகிழ்ச்சி கூத்தாடினான்.

அதே நேரம் அவளது ஒவ்வொரு வார்த்தைகளையும் ஓட்டிப்பார்த்தவன், அதில் அவளது உறுதி, அழுத்தம் என அனைத்தும் புரிந்தது. அவளுக்காக காத்திருக்கவே முடிவு செய்தான். ஆனால் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டிக்கு, அபிநந்தன் பயிற்சி அளித்தால் நிச்சயம் இவர்கள் தான் வெற்றி பெருவர். அத்தோடு மாணவர்களாக இது தான் இவர்களின் கடைசி கொண்டாட்டம். அது சிறப்பாகவும், என்றும் நினைவில் வைத்துக்கொள்ளும் வண்ணம் அமைய வேண்டுமென நடன போட்டியில் பங்கெற்கும் மாணவர்களின் கருத்து.

அதனால் எப்போதும் போல் இதற்கும் தலைமை பொறுப்பை கையிலெடுத்த அகி, அபியிடம் பேசினான். அவர் சரி என்றதும், வருங்கால மாமனாரை தனது செயலில் கவரப்பட வேண்டும் என்ற காரணத்தால் காலையில் அந்த மாப்பிள்ளை கோலம். ஆனால் அக்னியின் பேச்சை மீறி வந்தது அவனுக்கு குற்றவுணர்வு தந்தாலும் சூழ்நிலையின் கட்டாயம் அவன் அவ்வாறு செயல்பட்டான். அதில் அக்னியின் கோபம் அவனுக்கு வருத்தமளித்தது தான். ஆசையாக காதலி கூறிய வார்த்தையை, இத்தனை விரைவிலே உடைப்போம் என அவன் நினைக்கவில்லை. காலத்தின் மீது பாரத்தை போட்டுவிட்டான். எப்படியும் இனி ஒருமாதம் அக்னி தன்னோடு தான் அதிக நேரம் செலவளிக்கபோகிறாள். பார்த்துக்கொள்ளலாம் என அசட்டையாக விட்டுவிட்டான். மற்றவர்களை போலவே இயல்பான காதலனாக, அவள் கிடைக்கும் வரை பல குட்டிக்காரணம் போட்டவன், அவள் தன்னை விட்டு எங்கும் செல்லமாட்டாள் என்ற நம்பிக்கைக்கு, அவனது அசட்டு தனம் பெரிதும் காரணம்.

[✔]🌼என்னுயிர் தொடும் அனுமதி உனக்கே🌼Where stories live. Discover now