(இது என் முதல் நாவல் குறைகள் இருப்பின் மன்னிக்கவும் உங்களின் கருத்தை மறக்காமல் கூறவும்...)
சரவணன் பார்த்தவுடன் பிடித்து போகும் முகம், பழகிய மறுகணமே உதவும் குணம், நாளைய பற்றிய சிந்தனையே இல்லாத ஒரு வாழ்க்கை என அவன் நினைத்தவாறு வாழ்பவன். பள்ளியில் ஆரம்பித்து காலேஜ் ஆபீஸ் வரைக்கும் இவன் பின்னாடி சுத்தாத பெண்களே கிடையாது. இவனை ஒரு பிளேபாய் என்று கூட சொல்லலாம். இவனுடைய ஒரே ஒரு ஆண் தோழன் கிரிஷ் இவன் பெயருக்கு சிறிது கூட சம்பந்தமே இல்லாதவன். இவனுக்கு பெண்கள் என்றாலே பயம் மட்டுமே. ஒரு பெண்ணை கூட நிமிர்ந்து பார்க்க மாட்டான் அப்படி பட்டவன் சரவணனுக்கு நண்பனாக இருப்பது ஆச்சர்யமே. நம்ம ஹீரோ சரவணன் வீட்ல அம்மா (காயத்ரி) அப்பா(பாலமுருகன்) ஒரு தங்கச்சி(ஷாலினி என்ற ஷாலு) சரியான வாலு, சரவணன் & கிரிஷ் ரெண்டு பேரும் சின்ன வயசுல இருந்து ஒன்னதான் படிச்சாங்க இப்ப ஒரே ஆஃபீஸ் ல ஒர்க் பண்றாங்க. நம்ம ஹீரோ என்னதான் பொண்ணுங்க கூட சுத்துனாலும் இதுவரைக்கும் யாரையும் காதலிச்சதே இல்ல. அந்த ஐடியா கூட கிடையாது. வீட்ல கல்யாணம் பத்தி பேசுனா கூட அந்த இடத்த விட்டு எஸ்கேப் ஆகிடுவான். யாராச்சும் ஹெல்ப் அப்டின்னு கேட்டுட்டா நம்ம ஹீரோ ஆள செய்யாம இருக்கவே முடியாது. அதனால அடிக்கடி நிறைய பிரச்னைல மாட்டிப்பாரு. இருந்தாலும் அதை பத்தி அவர் கவலை பட்டதே கிடையாது. உண்மைய சொல்லனும்னா நம்ம ஹீரோ கு எல்லாமே டேக் இட் ஈசி தான். இப்ப கூட பாருங்க கூட ஒர்க் பண்ற சிவா க்கு ஒரு லவ் பிரச்னை அத solve பண்ண மதுரை சைடு ஒரு கிராமத்துக்கு கிளம்பிட்டு இருக்காரு.
YOU ARE READING
நீயும் நானும் அன்பே 😍😘😍 (முடிவுற்றது)
Romanceகண்டதும் காதல் கொண்டான் நம் கதாநாயகன் எனினும் அவன் அதை உணரும் முன்பே நம் கதாநாயகியின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டது விதியோ இல்லை சதியோ? இருவரின் குழப்பங்கள் தீரும் முன்பே அவர்களை திருமண பந்தத்தில் இணைத்து வைத்து வேடிக்கை பார்க்க தயாரானது அவர்களின்...